Skip to main content

நாளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்

Published on 27/03/2018 | Edited on 27/03/2018
bar

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நாளை(28.3.2018) நடைபெறுகிறது. பிப்ரவரி 1 -ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 171 வாக்குப்பதிவு மையங்களும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் 20 வாக்குப் பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 

 

பார்கவுன்சில் நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2016-ஆம் ஆண்டு முடிவடைந்தது. கடந்த 2 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாத நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நாளை தேர்தல் நடைபெறுகிறது.

 
 

சார்ந்த செய்திகள்