Skip to main content

குரூப்-4 தேர்வு முறைகேட்டில் மேலும் ஒருவர் கைது...!

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதிய 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்து, முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரை தகுதி நீக்கம் செய்துள்ள தேர்வாணையம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எழுத தடை விதித்துள்ளது.

 

tnpsc group 4 exam issue

 

 

இந்த முறைகேட்டில் தொடர்புடைய இரண்டு தாசில்தார்கள் உட்பட 10 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பாக கடலூரில் மேலும் ஒரு இடைத்தரகர் பிடிபட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்