Skip to main content

பெண் சிசுக்கொலை.. கடுமையாக எச்சரித்த ஆட்சியர்! 

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

tirupattur collector warns fake doctors

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட கிரிசமுத்திரம் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம்  மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

 

இக்கூட்டத்தில் ஊராட்சியில் நடைபெற்ற திட்டப் பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மக்களுடைய குறைகளை கேட்டறிந்தனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தங்கள் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை உள்ளதால், அப்பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என சாலையைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்ற மாணவர்கள் மீது கார் மோதி மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனால் இங்கு மேம்பாலம் கட்டித் தரவேண்டும் என கண்ணீர் மல்க, இருகரம் கூப்பிட்டு வேண்டுகோள் வைத்தார்.

 

அதைத் தொடர்ந்து பேசிய ஒருவர் அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்றி உள்ளது, அதனை செய்து தர வேண்டும். இங்கு உள்ள இளைஞர்கள் விளையாடுவதற்கும், பள்ளி மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்துவதற்கும் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தினர்.

 

அதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், “பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். சிறுவயதில் கல்வியை தவறவிட்டு பெண்களுக்கு திருமணம் செய்வது கூடாது. அப்படி செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இதனை கண்டறியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது. சிசுவின் பாலினத்தை கண்டறிந்து அவற்றை போலி மருத்துவர் மூலம் கருக்கலைப்பு செய்யும் நபர்கள் மீதும், அதற்குத் துணை போகும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாயமான சிறுமி! போலீஸ் அலட்சியத்தால் தந்தை விபரீத முடிவு 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Girl Child missing police investigation

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த 25 வயதான சபரியும் பள்ளி மாணவியும் சில மாதங்களாக  காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி விடியற்காலை 4 மணியளவில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர்கள் தனது மகள் காணாமல் போனதாக கடந்த 18ஆம் தேதி அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அச்சிறுமியின் தந்தை மற்றும் அவருடைய குடும்பத்தினர் அம்பலூர் காவல் நிலையத்திற்கு வருகை தனது மகளை கண்டுபிடித்தீர்களா? என கேட்கும் பொழுது காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மாணவியின் பெற்றோர்களை தரக்குறைவாக பேசி சிறுமியின் சித்தப்பாவை தாக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மீண்டும் நேற்று மாலை அம்பலூர் காவல் நிலையம் முன்பு வந்து தங்களது மகளை கண்டுபிடித்து தரக் கூறியும், தங்களை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டு இருந்த போது, சிறுமியின் தந்தை தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ குளிக்க முயன்றார். இதன் காரணமாக அம்பலூர் காவல் நிலையம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

தண்ணீர் கேட்டு பேசிய வார்டு உறுப்பினரை அவதூறாக பேசிய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர்! 

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
The husband of the Panchayat Council Chairman slandered the ward member who asked for water!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கே. பந்தாரப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட 4வது வார்டில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வராததால் 4வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கே பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா சரவணனுக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது தொலைப்பேசியை எடுத்து பேசிய ஊராட்சி மன்ற தலைவர் ஜெயாவின் கணவர் சரவணனிடம், 4வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, தன் வார்டில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரவில்லை எனக் கூறியுள்ளார். அதற்கு சரவணன் இதெல்லாம் பிரச்சனைன்னு இன்னொரு முறை பேசன.. என அவதூறாக பேசியதாக கூறுகிறார். 

இதனால் ஆத்திரமடைந்த 4வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, 8வது வார்டு உறுப்பினர் இளமதி ஆகியோர் கே. பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சரவணனை கண்டித்தும், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயாவுக்கு பதிலாக அவருடைய கணவர் செயல்படுவதை நிறுத்த வேண்டும் எனக் கோரியும் தர்ணாவில் ஈடுபட்டனர். 

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கே. பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா, தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் பேசியதால் தர்ணாவில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.‌