Skip to main content

“திருக்குறள் முற்றோதல் நிகழ்வு”

Published on 17/01/2019 | Edited on 17/01/2019

 

Thirukkural



கடலூர் மாவட்டம், பெண்ணாடம் மெய்கண்டார் ஆலையத்தில்  “திருக்குறள் முற்றோதல் நிகழ்வு” கடந்த 15-1-2019 காலை 9 .30 மணிக்கு துவங்கப்படது. 
 

இந்த நிகழ்வை பெண்ணாடம் திருக்குறள் மைய செயலாளர் லயன். தா. கோ. சம்பந்தம் ஏற்ப்பாடு செய்துள்ளார். முன்னாள் தலைமை ஆசிரியர் த. மாயில்வாகனன் அவர்கள் லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் லயன். மு. ஞானமூர்த்தி, ராஜமாணிக்கம், கால்நடை மருத்துவர் சிதம்பரம், கோடி ஆகியோர் திருக்குறளை படித்து முற்றோதல் நிகழ்ச்சியை துவக்கிவைத்தனர். 
 

இந்த நிகழ்வு 15-2-2019 வரை ஒரு மாத காலம் தினமும் மாலை 5 மணிமுதல் இரவு 8மணிவறை நடைபெறும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து இளைஞர்கள், மாணவர்கள் வருகைதந்து திருக்குறள் வகுப்பில் கலந்து கொண்டு முற்றோதல் நிகழ்சியில் பங்கெடுப்பார்கள்.
 

குறள் பற்றிய பொருள் விளக்கம், குறள் படித்து நினைவில் நிருத்துதல், குறள் படித்து பொருள் விளக்கல், வினாடி வினா நிகழ்ச்சி ,குறளை இசையுடன் பாடுதல், போன்ற பல்வேறு நிகழ்வுகளும், திறனாய்வு போட்டிகளும் நடைபெரும். ஒரு மாத காலம் தினமும் நடைபெறும் இந்நிகழ்வில் பல்வேறு தமிழறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

இரண்டடி திருக்குறளை ஓவியமாக்கும் சாதனை பெண் ‘செளமியா’

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

 ARTIST SOWMIYA | THIRUKURAL | PAINTING |

 

ஓவியம் மீதான ஆர்வம் வருவதற்கான காரணம் என் நினைவில் இல்லை. ஆனால், ஆரம்பம் முதலே எனக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் ஓவியம் வரைவேன். நோட்டுப்புத்தகத்தில் கூட ஓவியங்களே அதிகம் தென்படும். ஒரு கட்டத்தில் வாழ்க்கைக்கு ஓவியம் எப்படி உதவும் என தோன்றியது. அப்போது தனியார் நிறுவனத்தில் விஷுவல் மீடியா டிப்ளோமா படிப்பில் சேர்ந்தேன். இதற்கு முன் பல்வேறு வகையான ஓவியங்களை வரைந்திருப்பேன். எந்த ஒன்றில் கவனம் செலுத்துவது. எந்தெந்த வடிவங்களில் ஓவியம் வரையப்படுகிறது என்பது பற்றிய பயிற்சிகளை எடுத்துக் கொண்டேன். இதற்குப் பிறகு ஓவியங்களில் இருக்கும் வகைகள் பற்றி அறிந்து கொண்டேன். அங்கு பயிற்சி பெற்ற பிறகு வல்லுநராக உருப்பெற்றேன். 

 

எந்தவொரு ஓவியம் வரையும் பொழுதும் சிரமத்தை உணர்ந்ததில்லை. மாறாக அது மகிழ்ச்சியையே அளித்திருக்கிறது. இன்றோடு 1318 வது நாளாக நான் தொடர்ந்து வரைந்து வருகிறேன். இதில் இத்தனை சவால்கள் இருந்தாலும் முற்றிலும் இந்தப் பயணம் சந்தோசமாக தான் இருந்துள்ளது. முதுகலைப் பட்டமும் படித்து விட்டு, தற்போது ஆய்வு செய்து முனைவர் பட்டத்திற்கு பதிவு செய்யலாம் என சிந்தித்தேன். நமக்கு தெரிந்த ஓவியத்தை குறித்தே ஆய்வு மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன். நாலுவரி கவிதைகளை வைத்து ஓவியமாக எப்படி மாற்றுகிறார்கள் என்பது குறித்து சில ஆய்வுகள் இருக்கின்றன. அதேபோல், தமிழிலும் அதிகளவு சிறந்த இலக்கியங்கள் இருப்பதனால் இதனைத் தெரிவு செய்தேன்.

 

தமிழ் இலக்கியம் என முடிவு செய்த பின், முதலில் நினைவிற்கு வந்தது திருக்குறள். தமிழ் மொழியை கடந்து அவர்களின் வாழ்க்கை முறை எவ்வாறாக இருந்தது, எந்த மாதிரி சூழ்நிலைகளில் வாழ்ந்தோம், இப்பொழுது தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள் போன்ற கேள்விகள் எழும். விட்டலாச்சாரியா, வரலாற்றுப் படங்களை விரும்பிப் பார்க்கும் பழக்கம் அதிகம் உண்டு. ராஜாக்கள் காலத்து கதைகள் மிகவும் ஆர்வம் ஊட்டக் கூடியதாக இருந்தது. காலங்கள் செல்ல இதுபோன்ற படங்களின் வரவு குறையத் தொடங்கியது. ரசிகர்களின் மனதைக் கவரக் கூடிய படங்கள் அவர்களின் மரபு சார்ந்து எடுக்கப்படுபவையாக பெரும்பாலும் உள்ளது. மேலும் அவை அவர்களிடத்தில் ஆர்வத்தை உருவாக்கும். 

 

இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் முதல் பெரியோர் வரை பரீட்சயமான திருக்குறளில் இருந்து ஓவியத்தை துவங்கலாம் என முடிவெடுத்தேன். ஓவியம் வரைய ஆரம்பித்த முதல் பதினைந்து நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. முதல் நூறு நாட்களில் நேரம் தவறாமையைக் கற்றுக்கொண்டேன். அடுத்து, சிறிய அளவிலான தாளில் வரையத் தொடங்கி பின்பு பெரிய தாளுக்கு மாறினேன். வரையும் பொழுது சில யுக்திகளைக் கையாண்டு, யதார்த்தவாதம், உருவக முறைகளை பயன்படுத்தினேன். மக்களுக்கு பழமொழிகளைப் போல எளிமையில் எடுத்துரைக்க, அவர்களுக்கு நல்லது - கெட்டது எனத் தோன்றும் விசயங்களை வைத்து வரைந்தேன்.. இவ்வளவு நாட்களை கடந்தும் இன்றும் வரைதலின் சுவாரஸ்யம் அதிகரித்துள்ளது.
 

 

 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; ஆண் நண்பருடன் சேர்ந்து வாலிபரை கொலை செய்த பெண்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

cuddalore pennadam murugankudi village incident 

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள முருகன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் இவரது மனைவி கவிதா (வயது 28). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் பட்டாணி கடை வைத்திருப்பவர் ஆறுமுகம். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து பாலக்கரை பகுதியில் பட்டாணி கடை வைத்து நடத்தி வருகிறார்.

 

ஆறுமுகத்தின் கடைக்கு கவிதா பட்டாணி வாங்கச் சென்ற போது இருவருக்கும் இடையில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாடைவில் திருமணத்தை மீறிய உறவாக  மாறியது. இருவரும் விருத்தாசலம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.கிள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தி (வயது 55). இவர் ஆறுமுகத்தின் நண்பர். ஆறுமுகத்தை பார்க்க அடிக்கடி விருத்தாசலம் சென்ற வைத்திக்கும் ஆறுமுகத்துடன் வசித்து வந்த கவிதாவிற்கும் இடையே திருமணத்தை தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆறுமுகத்திற்கு தெரிய வரவே கவிதாவை கண்டித்துள்ளார்.

 

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை கவிதா ஆறுமுகத்திடம் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மறுநாள் வருவதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த ஆறுமுகம் கையில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு கவிதாவுக்கு தெரியாமல் அவரை பின் தொடர்ந்துள்ளார். கிள்ளனூரில் உள்ள வைத்தி வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு வைத்தியம் கவிதாவும் தனிமையில் இருந்துள்ளனர். இதை கண்டு கோபமடைந்த ஆறுமுகம் தன்னுடன் வருமாறு கவிதாவை அழைத்துள்ளார். இதனால் கவிதா, ஆறுமுகம், வைத்தி மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆறுமுகம் தான் எடுத்து வந்திருந்த பெட்ரோலை கவிதா மேல் ஊற்றுவதற்கு முயல கவிதாவும் வைத்தியும் ஆறுமுகம் மீது அந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர்.

 

இதில் ஆறுமுகம் பலத்த காயமடைந்துள்ளார். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார். இது குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கவிதா மற்றும் அவரது ஆண் நண்பர் வைத்தி இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.