Skip to main content

ராணுவத்திற்கு ஒரு பொருளை விலைக்கு வாங்குவதில் ஒன்றும் ரகசியம் இல்லை: ஈ.வி.கே.எஸ் தாக்கு!

Published on 14/09/2018 | Edited on 14/09/2018


ராணுவத்திற்கு ஒரு பொருளை விலைக்கு வாங்குவதில் ஒன்றும் ரகசியம் இல்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பாஜக அரசு பெரும் மோசடி செய்துள்ளது என காங்கிரஸ் கட்சி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கதிரவனிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,

மத்திய பாஜக மோடி அரசு போர் விமானங்கள் வாங்கியதில் 41,000 கோடி கொள்ளை அடித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது 500 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட அதே போர் விமானத்தை இப்போது 1,600 கோடிக்கு வாங்கியிருக்கிறார்கள். அப்படியெனில் ஒரு போர் விமானத்துக்கு ரூ.1,100 கோடி கொள்ளையடித்துள்ளார்கள்.

அதேபோல், தமிழ்நாட்டில் குட்கா ஊழலில் நடவடிக்கை எதுவும் இருக்கபோவதில்லை காரணம் அந்த ஊழலை விசாரிப்பவர்களே பெருத்த ஊழல் பேர் வழிகள் தான். தமிழக சிறைகளில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதை ஒன்றும் ஆச்சர்யமாக பார்க்க வேண்டியதில்லை. காரணம் வெகு விரைவில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அந்த சிறைக்கு போகத்தான் போகிறார்கள். அவர்கள் சிறைக்கு போகும் முன்பே சிறையில் இப்போதே சொகுசு வசதிகளை செய்திருக்கிறார்கள்.

மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்திருக்கிறது என எதிர்கட்சிகள் கூறினால், அது ராணுவ ரகசியம் என்கிறார். ராணுவ ரகசியம் என்பது இந்திய ராணுவத்திடம் என்னென்ன ஆயுதங்கள் இருக்கிறது என்பதை சொல்லுவது தான். ராணுவத்திற்கு ஒரு பொருளை விலைக்கு வாங்குவதில் ஒன்றும் ரகசியம் இல்லை என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓபிஎஸ் மகன் - ஈவிகேஎஸ் இழுபறி

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

 

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேனி தொகுதி்யில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், துணை முதல்வர் ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் குமாரும், திமுக கூட்டணி்யில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனும் மாறி மாறி முன்னிலையில்  வந்து இழுபறியில் உள்ளனர்.

 

e

 

Next Story

’30 சதவீதம் கமிஷன் கேட்டார்!’-ஓபிஎஸ் மீது ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு!!

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

 


தேனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்டச் செயலாளர் சாகுல் ஹமீது, காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர். 

 

ev

 

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வேட்புமனுவை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பெற்றுக்கொண்டார். 

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்,  ’’தேனி மாவட்டத்தில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்த ரயில் பாதை 20 வருடங்களாக பிராட் கேஜ் பாதையாக மாற்றப்படாமலே உள்ளது. இதற்காக நிதி ஒதுக்கியும், பல காண்ட்ராக்டர்களிடம் இந்தப்பணிகள் ஒப்படைக்கப்பட்டும் இன்னும் பணிகள் நிறைவேறாமல் இருக்கக் காரணம், தேனியைச் சேர்ந்த அமைச்சர் தான். எனக்குத் தெரிந்த ஆந்திரா காண்ட்ராக்டர் கூறும் போது, தேனி அமைச்சர் 30 சதவீதம் கமிஷன் கேட்கிறார் என்றார். அதனால் தான் தேனி மாவட்டம் ரயில் இல்லா மாவட்டமாக உள்ளது. நான் தேனி எம்.பி .யாக ஆனால், 6 மாதத்தில் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு தேனிக்கு ரயில் வரவழைப்பேன்" என்றார்.

 

ev

 

 தேனி அமைச்சர் என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மறைமுகமாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைக் குறிப்பிட்டுப் பேசினார்.  சிலர் பிஞ்சிலே பழுத்தது போல இருக்கிறார்கள். நான் மரத்திலேயே பழுத்து கனிந்தவன் என மறைமுகமாக ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரைத் தாக்கிப் பேசினார். 

 

நீங்கள் தேனிக்குப் புதுமுகமாக இருக்கிறீர்களே என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நடிகனாக இருந்தால் என்னை புதுமுகம் எனலாம். அரசியலில் தான் தேனிக்கு பழைய முகம்தான் என்று கூறினார்.