Skip to main content

'இனிமேல் நாடு முழுக்க நீட் தேவை இல்லை' - புது யோசனை சொன்ன விஜய்

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
 'There is no need for NEET in the whole country anymore' - Vijay said

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்து வருகிறார். கடந்த வாரம் 28 ஆம் தேதி தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்ற இந்த நிலையில், இன்று புதுச்சேரி காரைக்கால் உட்பட 19 மாவட்டங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் 'ஆளப்போறான் தமிழன்' என்ற பாடல் பின்னணியில் ஒலித்தபடி மேடை ஏறிய நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற தொடங்கினார். அவர் உரையில், ''நான் இன்று  எதுவும் பேச வேண்டாம் என்று தான் நினைச்சேன். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி நான் பேசவில்லை என்றால் அது அவ்வளவு கரெக்டாக இருக்காது என தோணுச்சு. நீங்களே கெஸ் பண்ணி இருப்பிங்க எதைப்பற்றி பேசப்போகிறேன் என்று, எஸ்... நீட், நீட் தேர்வு பற்றி தான். இந்த நீட் என்பது நம் தமிழ்நாட்டில் இருக்கின்ற மாணவ மாணவிகள் குறிப்பாக கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட  வகுப்பினைச் சேர்ந்த மாணவர்கள் ரொம்பவும் பாதிக்கப்படுகிறார்கள். இது சத்தியமான உண்மை.

இந்த நீட்டைப் பற்றி ஒரு மூன்று பிரச்சனைகளாக நான் பார்ப்பது ஒன்று; நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது. 1975 க்கு முன்னாடி பார்த்தால் கல்வி மாநில பட்டியலில் தான் இருந்தது. அதன் பிறகு தான் அதனை ஒன்றிய அரசு பொதுப்பட்டியலில் சேர்த்தார்கள். அதுதான் முதல் பிரச்சினையாக ஸ்டார்ட் ஆச்சு. ஒரே நாடு, ஒரே பாடத்திட்டங்கள், ஒரே தேர்வு இது பேசிக்காவே கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிரான விஷயமாக பார்க்கிறேன். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ற மாதிரி பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். இதை நான் மாநில உரிமைகளுக்காக மட்டுமே கேட்கவில்லை. கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்கள் பார்வைகள் இருக்கிறது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய பார்வை. பன்முகத்தன்மை என்பது பலமே தவிர பலவீனம் என்று சொல்ல முடியாது.

மாநில மொழியில் படித்துவிட்டு என்.சி.இ.ஆர்.டி சிலபஸில் தேர்வு வைத்தால் எப்படி அதுவும் கிராமபுரத்தில் இருக்கும் மாணவ மாணவிகள் மருத்துவப் படிப்புக்கு கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இது எவ்வளவு கடினமான விஷயம். போன மே மாதம் ஐந்தாம் தேதி நீட் எக்ஸாம் நடந்தது. அதில் சில குளறுபடிகள் எல்லாம் நடந்ததா செய்திகள் எல்லாம் பார்த்தோம், படித்தோம். அதன் பிறகு என்ன ஆகிவிட்டது என்று பார்த்தால் நீட் தேர்வுக்கு மேலே இருக்கின்ற நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் போய்விட்டது. இனிமேல் நாடு முழுக்க நீட் தேவை இல்லை என்பதை நாம் செய்திகள் மூலம் தெரிந்து கொண்ட விஷயம். சரி இதற்கு என்னதான் தீர்வு, நீட் விலக்குதான் தீர்வு. தமிழக அரசு  சட்டமன்றம் கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல் தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இதைச் சீக்கிரமாக சால்வ் பண்ண வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கு  நிரந்தர தீர்வுதான் என்ன என்று கேட்டால் கல்வி வந்து பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். ஒருவேளை அதில் ஏதாவது சிக்கல் இருக்கு என்றால் ஒரு இடைக்கால தீர்வாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி ஒரு சிறப்பு பொதுப்பட்டியல் என்று உருவாக்கி அதில் கல்வி மற்றும் சுகாதாரத்தைச் சேர்க்க வேண்டும். இப்பொழுது இருக்கிற பொதுப்பட்டியலில் என்ன பிரச்சனை என்றால் அதில் உள்ள துறைகள் எல்லாம் பார்த்தால் மாநில அரசுகளுக்கு என்னதான் அதிகாரம் இருந்தாலும் அது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கு. மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். ஒன்றிய அரசு அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு சில மெடிக்கல் காலேஜ் எய்ம்ஸ், ஜிப்மர், பிஜிஐ ஆகிய நிறுவனங்களில் வேண்டுமானால் நீட் எக்ஸாம் நடத்த வேண்டும் என்றால் நடத்திக் கொள்ளலாம். இது என்னுடைய சஜ்ஜஷன்தான் இது நடக்குமா? உடனே நடக்காது எனவும் தெரியும் அப்படியே நடந்தாலும் நடக்க விட மாட்டார்கள் என்றும் எனக்குத் தெரியும். எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய பரிந்துரையைச் சொல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன். இதுதான் என்னுடைய தனிப்பட்ட ஒரு கருத்து நீட்டைப் பற்றி'' என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யக்கூடாது” - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தல்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
NEET exam results should not be cancelled central govt insistence on the SC

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. மேலும் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மேலும் இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதோடு இந்த வழக்கின் விரிவான விசாரணையை ஜூலை 8 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் இளநிலை நீட் தேர்வில் பெரிய அளவிலான ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் முழு தேர்வையும் ரத்து செய்வது நியாயமானதாக இருக்காது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அந்த பிரமாணப் பத்திரத்தில், “இளநிலை நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்வது தேர்வை எழுதிய லட்சக்கணக்கான நேர்மையான விண்ணப்பதாரர்களுக்கு தீவிரமான விளைவுகளை கொண்ட ஆபத்தை ஏற்படுத்தும். அனைத்து போட்டித் தேர்வுகளையும் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. 

NEET exam results should not be cancelled central govt insistence on the SC

எந்தவொரு தேர்விலும் வினாத்தாள்களின் ரகசியத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.  சில குற்றவியல் கூறுகளின் பேரில் சில குற்றச்செயல்கள் காரணமாக, ரகசியத்தன்மை மீறப்பட்டால் இதற்கு காரணமானவர்களை தண்டிக்கப்படுவதை உறுதிசெய்யவும், அந்த நபர் மீது சட்டத்தின் முன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சதி செய்தல், ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்தல், நம்பிக்கை மீறல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பாக முழு விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என மத்திய அரசு  தனது பிரமாணப் பத்திரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

Next Story

குழந்தையாக மாறிய விஜய்; சிறுமி செய்த செயலுக்கு விஜய்யின் ரியாக்‌ஷன்!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Vijay's reaction to the girl's act in function

இந்தாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் சான்றிதழும், ஊக்கத்தொகையும் இரண்டு கட்டங்களாக வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி முதற்கட்டமாக தென்மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கினார்.

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சை, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு, விஜய் சான்றிதழையும், ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறார். 

இதில் பரிசு பெற்ற மாணவியின் குடும்பத்தில் வந்த சிறுமி, முட்டி போட்டுக்கொண்டு விஜய்யிடம் பக்கொடுக்க காத்திருந்தார். இதனைப் பார்த்த விஜய், சில வினாடிகள், அந்தச் சிறுமியை நேருக்கு நேர் பார்த்தார். இதனையடுத்து, விஜய்யும் முட்டிப் போட்டுக்கொண்டு அந்தச் சிறுமி கொடுத்தப் பூவை வாங்கிக் கொண்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.