Skip to main content

தமிழக அரசுக்கு நன்றி - கமலஹாசன்

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
kamal-haasan




கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன். அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஊடகங்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், 8 பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது என்றும் கூறியுள்ளார். 
 

kamal-haasan


 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சரியான திசை நோக்கிய முதல் அடி: கமல்ஹாசன்

Published on 11/04/2018 | Edited on 11/04/2018
kamal


 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை பின்பற்றாததால் வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்தநிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ''தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு வாழ்த்துகள். சரியான திசை நோக்கிய முதல் அடிதான் ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி மறுப்பு. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உங்களுக்குத் துணையாய் மக்களும் கண்காணிக்கத் துவங்கி விட்டார்கள்'' என கூறியுள்ளார்.