Skip to main content

ஓ.பி.எஸ். பதவியை கொடுத்தாலும் கூட இ.பி.எஸ். பக்கம் போகமாட்டேன் : தங்க தமிழ்ச்செல்வனின் பேட்டி

Published on 18/06/2018 | Edited on 18/06/2018
Thanga Tamil Selvan


18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் 18 எம்.எல்.ஏ.க்களின் ஒருவரான தங்கத்தமிழ்ச்செல்வன் தனது வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு இடைத்தேர்தலை சந்திக்க போவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

 

இந்த நிலையில் சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான ஆண்டிப்ட்டி தொகுதியில் உள்ள என்.டி.பட்டிக்கு வந்த தங்கத்தமிழ்ச்செல்வனோ தனது தீவிர ஆதரவாளரான திருமலாபுரத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் திண்டுக்கல் அ.தி.மு.க. பிரமுகரும், தொழிலதிபருமான மாயாண்டித் தேவர் தம்பதிகளின் மணமக்களான கணேஷ்குமார், சுகன்யாவின் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ள வந்த தங்கத்தமிழ்செல்வனிடம் ஒரு மினி பேட்டியை தொடர்ந்தோம்.
 

நக்கீரன் : ஒன்பது மாதங்களுக்கு பிறகு திடீரென வழக்கை வாபஸ் வாங்கிக்கொண்டு இடைத்தேர்தலை சந்திக்க போவதாக அறிவித்திருக்கிறீர்களே?

 

 

 

தங்கத்தமிழ்ச்செல்வன்: ஐகோர்ட் மேல எனக்கு இனி துளி அளவு கூட நம்பிக்கை இல்லை. இப்படியே தொடர்ந்து இன்னும் மூன்று வருடத்திற்கு இழுத்தடிப்பார்கள். அதனால்தான் நான் மட்டும் வாபஸ் வாங்குவதற்காக துணைப்  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் சட்ட ஆலோசகருடன் ஆலோசனை செய்து வருகிறோம். அதன் மூலம் சபாநாயகர் அறிவித்தபடி தொகுதியும் காலியாகிவிடும். அதன்மூலம் இடைத்தேர்தலும் நடக்கும் 
 

நக்கீரன் : அப்படி இடைத்தேர்தல் நடந்தால் நீங்கள் மீண்டும் போட்டி போடுவீர்களா?
 

தங்கத்தமிழ்ச்செல்வன்: சின்னம்மா துணைப் பொதுச்செயலாளர் டிடிவி ஆசியோடு மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட்டு கடந்த முறை கூடுதலாக வாங்கிய 31ஆயிரம் ஓட்டுக்களை விட இந்த முறை வாங்குவேன்.
 

நக்கீரன் : இது ஓ.பி.எஸ்.-ன் சொந்த மாவட்டம் அதோடு ஆளுங்கட்சியின் அதிகாரம் பணபலம் இருக்கும்போது நீங்கள் எப்படி பெற்றி பெற முடியும்?
 

தங்கத்தமிழ்ச்செல்வன்: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்  வெற்றி பெற்றார். அங்கேயும் அதிகாரம், பணபலம் எல்லாம் இருந்தது அதையெல்லாம் முறியடித்துத்தானே வெற்றி பெற்றார். 
 

நக்கீரன் : ஆர்.கே. நகரில் 20 ஆயிரம் தருவதாக கூறி 20 ரூபாய் நோட்டை கொடுத்துதானே டிடிவி வெற்றி பெற்றார்?
 

தங்கத்தமிழ்ச்செல்வன்: அதெல்லாம் கிடையாது டிடிவி மேல் நம்பிக்கை வைத்துதான் ஆர்.கே. மக்கள் துணைப் பொதுச் செயலாளரை வெற்றி பெற வைத்தனர்.
 

நக்கீரன் : ஆனால் உங்களை இ.பி.எஸ். அணியினர் இழுத்து மந்திரி பதவி கொடுக்கப் போவதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறதே?

 

 

 

தங்கத்தமிழ்ச்செல்வன்: சின்னம்மாவிற்கு எதிராக ஓ.பி.எஸ். பிரிந்து அதன்மூலம் எங்க சின்னம்மா ஆசியோடு முதல்வரான இந்த எடப்பாடி எனக்குத்தான் மந்திரி பதவி கொடுப்பதாக கூறியவர் கடைசியில் செங்கோடையனுக்கு கொடுத்துவிட்டார். அப்போதே நான் வெளிவந்திருக்கணும். இனிமேலேயா மந்திரி பதவிக்கு போக போகிறேன். ஓ.பி.எஸ். இடம் இருக்கும் துணை முதல்வர் பதவியை கொடுத்தால் கூட இபி.எஸ். பக்கம் போக மாட்டேன். 
 

நக்கீரன் :  தற்போது உங்கள் அணியில் உள்ள 21 எம்.எல்.ஏ.க்களின் 8 எம்.எல்.ஏ.க்கள் இபிஎஸ் அணிக்கு தாவ போவதாகவும் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறதே?
 

தங்கத்தமிழ்ச்செல்வன்: எங்க துணைப் பொதுச் செயலாளர் டிடிவி அணியிலிருந்து ஒரு எம்.எல்.ஏ.வை கூட இபிஎஸ் அணியினர் இழுக்க முடியாது. அப்படி ஒரு பொய்யான தகவல்களை பத்திரிக்கைகள் தான் பரப்பி வருகிறது. 
 

நக்கீரன் : ஓ.பி.எஸ். தரப்பு எம்.எல்.ஏ.வும் மனம் திருந்தி வந்தததால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியிருக்கறாரே?
 

தங்கத்தமிழ்ச்செல்வன் : துணை சபாநாயகராக அவரை நியமனம் செய்ததே தவறு. நல்ல திறமையானவர்களை மட்டுமே துணை சபாநாயகராக நியமிக்க வேண்டும். கட்சி தாவல் சட்டத்தில் மனம் திருந்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. மனம் திருந்தியதால் ஏற்றுக் கொள்கிறோம் என்றால் அவர் என்ன கடவுளா? பொள்ளாச்சி ஜெயராமனின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
 

நக்கீரன் : டிடிவி தினகரன் தான் வழக்கை வாபஸ் வாங்க சொல்லியிருப்பதாக பேசப்பட்டு வருகிறதே?
 

தங்கத்தமிழ்ச்செல்வன்: அப்படியெல்லாம் கிடையாது இத்தொகுதியில் பத்து வருடமாக அம்மா எம்.எல்.ஏ.வாக இருந்தபோது நான் தான் தொகுதி பொறுப்பாளராக இருந்தேன். அதுபோல் கடந்த முறையும், இந்த முறையும் எம்.எல்ஏ.வாக இருந்து கொண்டு குறைகளையும், கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்து வருகிறேன். அதனால்தான் என் தொகுதிக்கு ஒரு எம்.எல்.ஏ. வேண்டும் என்ற நோக்கத்தில் கேசை வாபஸ் வாங்க நினைக்கிறேனே தவிர பொதுச் செயலாளர் எல்லாம் கேசை வாபஸ் வாங்க சொல்லவில்லை.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.