Skip to main content

'விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் கனமழை பெய்ய வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

tamilnadu rains meteorological centre chennai

 

வட தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் வட தமிழகம், கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டு (திருவள்ளூர்)- 17 செ.மீ., ஆர்.கே.பேட்டை- 13 செ.மீ., தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) தலா 11 செ.மீ., திருத்தணி (திருவள்ளூர்)- 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வடக்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்