Published on 15/02/2018 | Edited on 15/02/2018
![Software job](http://image.nakkheeran.in/cdn/farfuture/DdmQFE7d7OcQEEaJExDAg_LrD52f7RdM0HWi_7EMENo/1533347628/sites/default/files/inline-images/IT-Staff.jpg)
ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையை எடுத்துக் கொள்வோம். நமது குடும்பங்களிலேயே உள்ள பல பிள்ளைகள் ஐடி நிறுவனங்களிலே வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் 35 வயதை எட்டியதும், வேலைகளில் இருந்து நீக்கப்படுகிறார்கள். இவர்களிலே பலர், வீட்டுக் கடன் வாங்கியுள்ளார்கள். பலர் வாகனக் கடன் வாங்கியுள்ளார்கள்.
![Kanimozhi](http://image.nakkheeran.in/cdn/farfuture/BZ8AGFeRPyJe7zuXRUSviAI1QH1-VVwYT5d0DKSa7SM/1533347658/sites/default/files/inline-images/kk21.jpg)
சாஃப்ட்வேர் நிறுவனங்களிலே பணியாற்றும் அந்த இளைஞர்கள் சக்கையாக கசக்கிப் பிழியப்பட்டு, தங்களின் இளமைக்காலம் முடியும் அந்தத் தருவாயில் அவர்கள் நீக்கப்படுகிறார்கள். வேலையில்லாமல், வாங்கிய கடனையும் கட்ட முடியாமல் திணறுகிறார்கள். குடும்பம் நடத்த முடியாமல் தடுமாறுகிறார்கள். சிலர் தற்கொலைக்கு வரை சென்றுவிடுகிறார்கள். அந்த இளைஞர்களின் பணிப் பாதுகாப்புக்கு இந்த அரசு என்ன செய்துள்ளது? என கேள்விஎழுப்பி வருகிறார் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி.
-இளையர்.