Skip to main content

பொதுமக்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி!

Published on 22/03/2020 | Edited on 22/03/2020

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் 14 மணி நேர சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலா தலங்கள், சாலைகள், தேசிய நெடுஞசாலைகள், கடற்கரைகள் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இருப்பினும் தமிழகத்தில் மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் இன்று வழக்கம் செயல்படுகின்றன. 

tamilnadu minister vijaya baskar thanks to peoples

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், "சுயஊரடங்கு கடைப்பிடித்து வீட்டிலேயே இருக்கும் மக்களுக்கு நன்றி. நாம் அனைவரும் ஒன்றிணைந்து கரோனா பரவலை தடுப்போம்" என குறிப்பிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்