Skip to main content

சன் பார்மா விரிவாக்கத்திற்கு இடைக்கால தடை!

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

vetathangal

 

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ள இடத்திற்கு அருகே உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனமான சன் பார்மா நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

சரணாலயம் உள்ள பகுதியில் கட்டமைப்புகளையும் மேற்கொள்ள தேசிய வன உயிர் வாரியத்தின் அனுமதி அவசியம் என விதி உள்ளது. இந்த நிலையில் சன் பார்மா மருந்து நிறுவனம் இந்த விதிகளை பின்பற்றவில்லை என வழக்கு தொடரப்பட்டிருந்தது. 1998 ஆம் ஆண்டு சரணாலயத்தை சுற்றியுள்ள ஐந்து கிலோ மீட்டர் பரப்பளவும் சரணாலயமாக கருதப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் சன் பார்மா விரிவாக்கத்திற்கு கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யக்கோரி தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த இடைக்காலத் தடையை விதித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்