Skip to main content

தடையை மீறிய தமிழக அரசு! இரவு நேரத்திலும் ரேசன் கடைகளில் ரூ.1000 விநியோகம்!

Published on 09/01/2019 | Edited on 09/01/2019

வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில், இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சிவகாசி வந்திருந்த கடம்பூர் ராஜு பேட்டி அளித்தபோது - 

 

 At night, ration shops are priced at Rs.1000

 

“நீதிமன்ற நடைமுறை வந்துவிட்டால், உடனடியாக அரசாங்கம் முடிவு செய்துவிட முடியாது. பொங்கல் பரிசு வழங்குவதென்பது புதிதல்ல. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பொங்கல் பரிசோடு ரூ.100 வழங்கினார். அம்மா வழியில் அதனை விரிவாக்கம் செய்து ரூ.1000 கொடுப்பதாக அறிவித்து, மகிழ்ச்சியோடு மக்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலைமையில், இப்போது தடை விதித்திருந்தாலும் கூட, மேல்முறையீடு செய்து, மக்களுக்கு நிச்சயமாக அரசு வழங்கும்.” என்றார். 

 

அறிவித்தபடி கொடுத்தாக வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதை அறிந்தோ என்னவோ, விருதுநகர் மாவட்டத்தில் தடையை மீறியிருக்கின்றனர். மம்சாபுரம் ரேஷன் கடையில் இரவு 12 மணி வரையிலும் போலீஸ் பாதுகாப்புடன் பொங்கல் பரிசு கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து, கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இரவு 10 மணி கடந்தும், ஸ்ரீவில்லிபுத்தூர், மாயாண்டிபட்டி ரேஷன் கடை எண் 1-இல் ரூ.1000 உள்ளிட்ட பொங்கல் பரிசினை பொது மக்களோடு சேர்ந்து காவல் துறையினரும் பெற்றுச் சென்ற வண்ணம் உள்ளனர். இதே ரீதியில், ஸ்ரீவில்லிபுத்தூரில் பல ரேஷன் கடைகளும் கண்விழித்துக் கடமையாற்றுவதால், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

 

 At night, ration shops are priced at Rs.1000

 

நக்கீரன் வாசகர் ஒருவர்,  ரேசன் கடை தள்ளுமுள்ளு காட்சிகளைத் தனது செல்போனில் படம் பிடித்து நமது இணையதளத்துக்கு அனுப்பியிருக்கிறார். 

 

உயர் நீதிமன்றத் தடையைத் தமிழக அரசும் விருதுநகர் மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாதது கண்கூடாகவே தெரிகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.