Skip to main content

இரண்டு நாளில் திரும்புவதாக இருந்தால் கரோனா பரிசோதனை வேண்டாம்!

Published on 17/06/2020 | Edited on 17/06/2020

 

tamilnadu chief secretary shanmugam all district collectors


தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

 

அதில் 'தொழில் ரீதியாக அண்டை மாநிலம் சென்று 48 மணி நேரத்தில் திரும்புவதாக இருந்தால் கரோனா பரிசோதனை வேண்டாம். ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலத்திற்குத் தொழில் ரீதியாகச் செல்பவர்களை அனுமதிக்கலாம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்ய இ- பாஸ் கட்டாயம் தேவை" என்று குறிப்பிட்டுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்