Skip to main content

இரண்டாம் நாளாக தொடரும் அரசுப் பேருந்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்...! (படங்கள்)

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

ஓய்வூதியதாரர்களுக்குப் பணபலன், 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து ஊழியர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (26.02.2021) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.

 

இதனால் அரசு தரப்பில், அனைத்து பேருந்து நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்புடன் தற்காலிக ஊழியர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தி.நகர் மற்றும் வடபழனி டிப்போ போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக் தொடர்வதால், தனியார் ஒட்டுநர்களை வைத்து பஸ்களை இயக்குகின்றனர். கோயம்பேடு, ஆவடி, சென்ட்ரல் மற்றும் ப்ராட்வே பஸ் நிலையம் மற்றும் டிப்போக்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன. இதனால் பேருந்துக்கள் அனைத்தும் பணிமனைகளிலே நிறுத்தப்பட்டன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சியிலும் தொடரும் பேருந்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்...!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

Bus workers' strike continues in Trichy

 

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சியில் இன்று (26.02.2021) காலை 11 மணியளவில் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் போக்குவரத்து அமைச்சரைக் கண்டித்து கூட்டமைப்புத் தலைவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

 

உறுப்பினர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு, திருச்சி மண்டலம் புறநகர் கிளை முன்பு இன்று நடைபெற்றது. இன்றும் குறைந்த அளவு எண்ணிக்கையிலேயே திருச்சி, கரூர் மண்டலங்களில் பேருந்துகள் இயங்கின. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, திருச்சி மாநகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

 

 

Next Story

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்... வெறிச்சோடிய பேருந்து நிலையம்!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

tamilnadu government bus employees in nagai district

 

அரசுப் பேருந்து போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், நாகை மாவட்டத்தில் 90 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்களும், சுற்றுலாவாசிகளும் தடுமாறினர். 

 

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்குப் பணபலன்களை வழங்க வேண்டும், காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

tamilnadu government bus employees in nagai district

 

குறிப்பாக, நாகை மாவட்டத்தில் 350- க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மண்டலத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் உள்ளிட்ட 11 பணிமனைகளில் உள்ள 521 பேருந்துகளில் 112 பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. நாகை மாவட்டத்தில் 50 பேருந்துகள், திருவாரூரில் 48 பேருந்துகள், மயிலாடுதுறையில் 14 பேருந்துகள் இயக்கப்பட்டன. நாகை பேருந்து நிலையத்தில் சொற்ப அளவிலான பேருந்துகள் இயங்கி வந்ததால், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சுற்றுலா வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 

 

மேலும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் பேருந்து கிடைக்காததால் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் நாகை பேருந்து நிலையத்தில் சில தனியார் பேருந்துகள் மட்டுமே இயங்கியதால், உள்ளூரில் வேலைக்குச் செல்லக்கூடியவர்கள் தனியார் பேருந்துகளில் பயணித்தனர். அரசுப் பேருந்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, பேருந்து நிலையம் பேருந்துகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது.