Skip to main content

மோசடி பேர்வழிகள் மோடியை மோசடி பிரதமர் என கூறுவதா... தமிழிசை காட்டம்

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

இன்று தூத்துக்குடி கோவில்பட்டி கழுகுமலை அருகிலுள்ள கழுகாசலமூர்த்தி கோவிலில் சாமி தரிசனத்துடன் தேர்தல் பரப்புரையை பாஜக கட்சியின் மாநில தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கினார்.

 

தரிசனம் முடித்த கையோடு அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,

 

tamilisai

 

நேற்று இங்கு பரப்புரை மேற்கொண்ட கனிமொழி கடந்த 5 ஆண்டுகளாக மோடி எதுவும் செய்யவில்லை என பொய் பிரச்சாரம் செய்துள்ளார். இந்த மண்ணை பாதிக்கக்கூடிய, மக்களுக்கு வேண்டாம் என வெறுக்கும் எந்த தொழிற்சாலைகளையும் இங்கே மக்கள் அனுமதி இல்லாமல் செயல்பட விடமாட்டோம்.

 

தமிழர்களை பாதுகாப்பதற்கு இவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமாம். திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்த போதுதான் அங்கு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். ராஜபக்சே அவரது அறிக்கையில் சொல்லியிருக்கிறார் காங்கிரஸ் திமுக துணையோடுதான் இது நடைபெற்றது என்று. ராஜபக்சேவை நேரில் சந்தித்து அவரிடம் பரிசு வாங்கிய கனிமொழி இப்போது தமிழர்களை காப்போம் என்கிறார்.

 

வர வர ஸ்டாலின் மோடியை பற்றி மிகவும் தரம்தாழ்ந்த வார்த்தைகளில் விமர்சித்து வருகிறார். அதற்கு என் கடும்கண்டனத்தை முன்வைக்கிறேன். மோசடி பேர்வழிகள் மோடியை மோசடி பிரதமர் எனக்கூறுவதை எப்படி ஏற்கமுடியும். நீங்கள் எதை சொன்னாலும் தமிழ் மக்கள் ஏற்கப்போவதில்லை. ஒருபோதும் நீங்கள் முதல்வராக முடியாது.  நீங்கள் பரிந்துரைக்கும் ராகுல் பிரதமராக முடியாது.

 

தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்றால் பாஜக அதிமுக கூட்டணிக்கு வாக்கு செலுத்துங்கள் எனக்கூறிய தமிழிசை பிரச்சார வாகனத்தில் ஏறி கடம்பூர் ராஜுவுடன் பிரச்சாரம் மேற்கொண்டார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.