Skip to main content

பயங்கர பதற்றத்தில் எதிரணியினர்- தமிழிசை பேட்டி  

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

இன்று சென்னை பசுமைவழி சாலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

 

அப்போது பேசுகையில்,

 

TAMILISAI

 

பல கட்சிகளோடு சேர்ந்துதான் தொகுதி பங்கீடு இருக்கும். எனவே கால அவகாசம் இருக்கிறது. ஒன்றும் கவலையில்லை, ஆனால் எதிரணியினர் பயங்கரமான பதற்றத்தில் உள்ளனர். நேற்றைய தினம் என்.டி.ஏவா அல்லது அதிமுகவா என பெரிய விவாதமே நடைபெற்றது. எங்கோ போய் ஏதவாது பிரச்சனையை குழப்பலாம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றும் பிரச்சனையில்லை. தேசிய அளவில் பிரதமர் மோடிதான் தலைவர். தமிழகத்தை பொறுத்தமட்டில் அதிமுகத்தான் பிரதான கட்சி. எனவே அதிமுக கூட்டணியில் பாஜக பங்கேற்றுள்ளது.

 

 

தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இணக்கமான சூழ்நிலை உருவாகும் என்று நினைக்கிறேன். அவர்கள் தேசப்பற்று உள்ளவர்கள். தேசப்பற்று உள்ளவர்கள் மோடியைத்தான் தலைவராக ஏற்பார்கள். அரசியல் தலைவர்கள் பலர் விஜயகாந்த்தை சந்திப்பது அவரது உடல்நலம் தேறுவதற்கே தவிர தேர்தலுக்கல்ல. பழங்களும் பழுத்துக்கொண்டுதான் இருக்கிறது மலர்கள் மலர்ந்து கொண்டுதான் இருக்கிறது மகிழ்ச்சியாக வெற்றியையும் மலரத்தான் செய்யப்போகிறோம். தற்போது முதல்வரை சந்தித்து நாளை நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் விரைவில் தமிழகம் வரும் பிரதமர் தொடர்பான நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனை நடத்தினேன் என்றார்.

 

மீண்டும் மோடி தமிழகம் வர உள்ளார் ஆனால் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.