Skip to main content

கேரளாவை அலறவிட்ட கொள்ளையர்கள்; தமிழக காவல்துறையிடம் சிக்கியது எப்படி?

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

Tamil Nadu police arrested the robbers in Kerala

 

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பட்டறை சுரேஷ் (30). தூத்துக்குடியின் மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்தவர் எட்வின்ராஜ் (34). இருவரும் கூட்டாளிகள். இவர்கள் இருவரும் கேரளாவின் திருவனந்தபுரத்தில் பைக் ஒன்றை திருடியுள்ளனராம். பின்னர், பாரிப்பள்ளியிலுள்ள வீட்டை உடைத்து ஏழரை பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும், சாத்தனூர் காவல் நிலையம் அருகே உள்ள கனகமந்திரிலிருக்கும் ஷியாம்ராஜ் என்பவரின் வீட்டை உடைத்து அலமாரியிலிருந்த ரூ. 3.75 லட்சம் மற்றும் மூன்றரை பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாம்.

 

ஷ்யாம்ராஜ் தன் மனைவி பணிபுரியும் இடத்திலிருந்து வீடு திரும்பும் போது வீட்டைச் சுற்றி சந்தேகத்திற்கிடமாகக் காணப்பட்ட இருவரை புகைப்படமெடுத்துள்ளளார். மேலும், அவர் வீடு வந்து பார்த்ததில் வீட்டின் முன் ஒருவர் பைக்கில் செல்வதையும், மற்றொருவர் வீடு முன்னே உள்ள பார்க்கிங்கில் நடந்து செல்வதைப் பார்த்தவர், யார் என்று அவர்களைக் கேட்க, அவர்களோ தண்ணீர் குடிக்க வந்ததாகச் சொல்லியிருக்கின்றனர். மேலும், அருகே தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடப்பதால் அத்தொழிலாளர்கள் என நினைத்து சந்தேகப்படவில்லையாம். ஆனால், அதன் பிறகே தனது வீடு கோடாரியால் உடைக்கப்பட்டு கட்டுமான நிறுவனப் பணம் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு பதறியவர் ஆதாரத்துடன் புகார் கொடுத்திருக்கிறார்.

 

Tamil Nadu police arrested the robbers in Kerala

 

இதையடுத்து, அப்பகுதியில் கவிதா என்பவரின் வீடும் உடைக்கப்பட்டு அலமாரியிலிருந்த ஏழரை பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது. தவிர அங்குள்ள இரண்டு நாய்கள் மயங்கிக் கிடந்ததால் அவைகளுக்கு உணவில் மயக்கமருந்து கொடுத்து கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என கேரள போலீசார் சந்தேகித்தனர்.

 

இதைத்தொடர்ந்து, சிக்காமல் போன கொள்ளையர்கள் தமிழகம் தப்பியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சி.சி.டி.வி. ஆதாரம் மற்றும் புகைப்படங்களை தமிழகப் போலீசாருக்கு கேரள போலீசார் அனுப்பி உஷார் படுத்தியிருக்கிறார்கள். இதனிடையே, தென்காசி மாவட்டத்தின் கேரள எல்லையான புளியரை எல்லையில் எஸ்.ஐ. வெள்ளத்துரை மற்றும் மாரிராஜ், பொன்ராஜ் உள்ளிட்ட போலீசார் பைக் மற்றும் பேருந்துகளைத் தீவிரமாகச் சோதனை நடத்தினர். அதே சமயம் இருவரும் தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் பொருட்டு கொல்லம் – தென்காசி பேருந்தில் வந்து கொண்டிருந்தனர்.

 

நேற்று மாலை 4 மணியளவில் வந்த அந்தப் பேருந்தைச் சோதனையிட்டனர். அது சமயம் பயணிகளோடு பயணிகளாக இருந்த இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 350 ரூபாய், 36 கிராம் தங்க நகை, 178 கிராம் கவரிங் நகை மற்றும் கொள்ளையடிக்கப் பயன்படுத்திய கத்தி, கடப்பாரை, கம்பி போன்றவைகளைப் பறிமுதல் செய்து அவர்களையும் கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.