Skip to main content

பிரதமருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்...

Published on 08/07/2020 | Edited on 08/07/2020

 

 Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy's letter to PM

 

அரசு பணியில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவீத  இட ஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இட ஒதுக்கீடு கணக்கீட்டில் பழைய முறையே தொடர வேண்டும். புதிய திருத்தம் வந்தால் தகுதியான ஓ.பி.சி. பிரிவினர் மத்திய அரசு பணியில் சலுகைகளை பெற இயலாத நிலை ஏற்படும். ஓ.பி.சி. பிரிவினருக்கு தமிழக அரசின் இட ஒதுக்கீடு முறையை மத்திய அரசு பணியிலும் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கிரீமிலேயர் வரம்பு கணக்கில் சம்பளம் கிடைக்கும் வருவாயை கணக்கில் பெறுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்