Skip to main content

தென் மாவட்டத்தில் பரவும் பன்றிக் காய்ச்சல்

Published on 31/10/2018 | Edited on 31/10/2018
ne

 

கோடை சீதோஷ்ணம் மாறுதலாகி மழைக்காலம் தொடங்கும்போதே உடன் பூச்சிகளும் வைரஸ்களும் உற்பத்தியாவது இயற்கை தான் என்கிறது விஞ்ஞானம். அதன் தாக்கத்திலிருந்து சுகாதாரத்தைப் பேணி மக்களைப் பாதுகாப்பதே அரசின் கடமை. கடந்த சில பருவ மாற்ற காலங்களில் அரிய வகையான டெங்கு காய்ச்சல் தென் மாவட்டமான நெல்லை குமரி தூத்துக்குடி மாவட்டங்களில் பரவியது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தின் வட பகுதியில் டெங்கு பாதிப்பால் பலர் உயிரிழந்தனர்.

 

மனித உடம்பின் எதிர்ப்பு சக்தியான லட்சக்கணக்கில் எண்ணிக்கை கொண்டிருக்கும் வெள்ளையணுக்களை உடலில் புகுந்து தின்றொழிக்கிற வைரசை உற்பத்தி செய்வது ஏ.டிஸ் என்ற கொசு. இதன் தாக்குதல் காரணமாக கடுமையான உடல் வலி காய்ச்சல் ஏற்படுகிறது. உயிரைப் பாதுகாக்கிற வெள்ளையணுக்கள் அழிக்கப்பட்டு மரணம் வரை கொண்டு செல்கிற ஆபத்தான கொசு ஏ.டிஸ் தான் டெங்குவின் பிறப்பிடம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

 

n

 

பெரும்பாலும் இந்த வகை கொசுக்கள் மழைநீர் தேங்கி நிற்கிற கொட்டாங்கச்சி கழிக்கப்பட்ட பிளாஸ்டிக் டப்பா, மற்றும் கடாசப்பட்ட டயர்கள் போன்றவைகளில் முட்டை வடிவத்தில் காணப்படும் லார்வா கூட்டத்தில் பிறப்பெடுக்கும் புழுக்கள் மூலம் ஏ.டிஸ் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இவைகளைக் கண்டறிந்து சுகாதாரத்துறையினர் அவைகளை அழித்தொழிக்கும் பணியினை மேற் கொண்டாலும், அது பரவுவது நடந்து கொண்டு தானிருக்கின்றன.

 

 இந்த டெங்கு காய்ச்சலுடன் தற்போது டாமி ஃபுளு எனப்படும் பன்றிக்காய்ச்சலும் வர்க்கம் பாராமல் மனிதர்களைத் தாக்குகிறது. கடுமையான தசைவலி மயக்கம் வாந்தி ஓயாத காய்ச்சலை போன்ற கடுமையான உபாதைகளை ஏற்படுத்துகிற பன்றிக்காய்ச்சலும், இது போன்ற வைரஸ்களின் தாக்குதலால் ஏற்படுகின்றன என்கிறது மாநில சுகாதாரத்துரை.

 

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருந்த போதிலும், பன்றிக் காய்ச்சல் சவாலாகப் பரவி வருகிறது. இதற்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு அந்நோய் கண்டவர்களுக்கு சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று வாரங்களில் பாளை அரசு மருத்துவமனையில் 27 பேர்கள் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்ட்டு சிலர் சிகிச்சைக்குப் பின்பு வீடு திரும்பினாலும் அதே அறிகுறியுடன் 7 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

 

இச்சூழலில் பாளை வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த மாசானம் (38) என்பவர் நேற்று முன்தினம் காய்ச்சல் தொண்டை வலியுடன் அனுமதிக்கப்பட்டவருக்கு சோதணையில் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு டாக்டர்களின் தீவிர சிகிச்சையும் பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக மரணமடைந்தார்.

 

இது போன்று தாக்கமிருப்பின் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும்  அதற்கான மருந்துகள் டாமி ஃபுளு மாத்திரைகள் அங்கு தான் உள்ளன. என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 5 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்கிறார் கலெக்டர் சந்தீப் நந்தூரி.

 

பன்றிக்காய்ச்சல் எனப்படுகிற FLU.AH1.N1. ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும், 60 வயதிற்கும் மேலுள்ள முதியவர்களுக்கும், கர்ப்பிணி, இருதய பாதிப்பு உள்ளவர்கள், மற்றும் சிறுநீர் பாதிப்பு உள்ளவர்கள் போன்றவர்களுக்கு உடனடி பாதிப்பு வரவாய்ப்புள்ளது. காற்றின் மூலம் இந்த வைரஸ்கள் பரவுவதால் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அந்நோய் கண்டவர்களிமிருந்து ஒரு மீட்டர் தள்ளி நின்றே பேச வேண்டும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

 

பத்தமடைப் பகுதியில் ஆய்வு செய்த நெல்லை கலெக்டர் ஷில்பா டெங்கு உற்பத்தி தடுப்புக்கான பணிகளை ஆய்வு செய்தார். டெங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தகுந்த முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.   ஆனாலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொசுக்களை ஒழிப்பதற்கான பூச்சிக் கொல்லி பவுடர்கள் தூவப்படவில்லை, மற்றும் கொசுவை ஒழிக்கிற மருத்துவப் புகை வீச்சு நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படவில்லை என்பதே பொது மக்களின் அதிருப்தி.

 

காலநேரங்கள் சாதகமாகத் தெரியவில்லை. தடுப்பு நடவடிக்கைகள் பரபரக்க வேண்டிய அவசர காலமிது என்கிற எண்ணமே பரவான எதிரொலிப்பு.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story

'எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனேஜர் என்றே தெரியாது'-மழுப்பிய நயினார் நாகேந்திரன்

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டி ஏ-1 26, 27, 28 ஆகிய இருக்கைகளில் நயினார் நாகேந்திரன் கோட்டாவில் அவர்கள் பயணித்தது தெரியவந்தது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

nn

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய ஆதரவாளர் கணேஷ்மணி என்பவர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது. வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 வேட்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மது பாட்டில்களும் சிக்கியதாக பறக்கும் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நயினார் நாகேந்திரன் தங்கும் ஹோட்டல் அறையிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் அவர் தங்கும் அறையிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. நாகேந்திரனுக்கு தொடர்புடைய வண்ணாரப்பேட்டையில் உள்ள லட்சுமி காயத்ரி ஹோட்டல் உரிமையாளர் குணசேகரன் வீட்டிலும் 3.72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் மட்டுமின்றி ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் திமுகவும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், 'எனக்கு வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க அவரவர்கள் தொழிலுக்காக பணத்தை வைத்திருப்பார்கள். எனக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனஜர் என்றே தெரியாது' என பதிலளித்துள்ளார்.