Skip to main content

அகில இந்திய கிக் பாக்ஸிங் போட்டியில் கடலூர் மாவட்ட மாணவர்கள் சாதனை

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
Students of Cuddalore District Achieve All India Kickboxing Competition

மகாராஷ்டிரா மாநிலம்  புனேவில்  உள்ள  சத்திரபதி சிவாஜி  இன்டோர்  ஸ்டேடியத்தில் அகில இந்திய கிக் பாக்ஸிங் போட்டி  ஜூனியர் மாணவர்களுக்கு மே  21 முதல் 26 ஆம் தேதி வரை  நடைபெற்றது.

இதில் கடலூர் மாவட்ட அமைச்சூர் கிக் பாக்ஸிங் மாணவர்கள் சென்சாய். வி.ரங்கநாதன்  தலைமையில்  தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்ஸிங் அணியுடன் இணைந்து லைட் காண்டாக்ட்  மற்றும் பாயின்ட் ஃபைட் . பிரிவில்  கடலூர் மாவட்ட மாணவர்கள். பி.கிரித்திஷ் முதல் பரிசும், லைட்  கான்டக்ட் பிரிவில் வி.முகுந்தன் இரண்டாம் பரிசும், லோகிக் பிரிவில் மாணவி. எம்.எஸ்.ஆதிர சகானா மூன்றாம் பரிசும் பெற்று தமிழகத்திற்கும் கடலூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இப்போட்டியில் தேசிய நடுவராக. ஆர் ரவிக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களை தமிழ்நாடு அமைச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத் தலைவர் சுரேஷ்பாபு, கடலூர் மாவட்ட வீரு கிக் பாக்ஸிங் சங்கத் தலைவர் சென்சாய்.ரங்கநாதன், செயலாளர் சத்யராஜ், பயிற்சியாளர் சுபாஷ் பிரத்தியூனன், டீம் மேனேஜர் திவ்யா ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள்.

சார்ந்த செய்திகள்