Skip to main content

கருப்பில் ஆரம்பித்து வண்ணமயமாக முடிந்தது காலா- காலா படம்பார்த்த தமிழிசை மகிழ்ச்சி

Published on 07/06/2018 | Edited on 07/06/2018

 

தமிழகத்தில் பல ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்துவந்த காலா திரைப்படம் இன்று வெளியானது. காலா ரஜினியின் அரசியல் வருகையை அறிவித்தற்கு பிறகு வரும் முதல் படம் என்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி பல அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுவந்தது. தற்போது காலா படம் இன்று வெளியானதை தொடர்ந்து பாஜக கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காலா படத்தை இன்று தனது சகோதரகளுடன்  திரையரங்கில் திரைப்படத்தை பார்த்து ரசித்தார். பின்னர் தியேட்டர் வாயிலிலேயே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது

 

கிளீன் இந்தியா திட்டத்தை விமர்சித்த மாதிரி இருக்கிறதாக சொல்வது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல திரைப்படத்தையும் எதார்த்த உண்மையையும் இணைத்து பார்ப்பதால் பிரிவினைதான் வரும். நான் ஒன்றை மட்டும்தான் கவனித்தேன் கருப்பில் ஆரம்பித்து இறுதியில் வண்ணமையமாக முடிந்தது அதேபோல் எல்லோர் வாழ்க்கையும் வண்ணமயமாக இருக்கவேண்டும் என்பதே என் ஆசை


 

tamilisai

அரசியல் வேறு திரைப்படம் வேறு அவர் ஒரு நடிகராக இருந்துதான் அரசியலுக்கு வருகிறார். அதேபோல் பல நடிகர்கள் அரசியலுக்கு வந்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். எனவே அவர் அரசியல் பேசுவது அவரது சொந்த கருத்து. அதேபோல் அவர் நடிகர் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே. இப்போது மட்டுலமல்ல இதற்கு முன் வந்த நிறைய ரஜினி படங்களில் அரசியல் கருத்துக்கள் வந்துகொண்டே இருக்கிறது அதனால் அதையெல்லம் பெரியதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

 

எனக்கு காதல் கதைகள் ஆடல்,பாடல் போன்றவை உள்ள கதைகளை விட சமூக அக்கறை கொண்ட படங்கள் எனக்கு பிடிக்கும் எனவே இந்த படம் சமூக கருத்துகொண்ட படம் என்று கேள்விப்பட்டேன் அதனால் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த திரைப்படத்திற்கு வந்தேன்.

 

யார் வேண்டுமானாலும் அரசியல்வாதி ஆகலாம்.  அரசியல்வாதிகள் மக்களை  இயக்கி கொண்டிருக்கிறார்கள். பா.ரஞ்சித் அரசியல்வாதி என்று கூறுவது அவருடைய சொந்த கருத்து என்னை பொறுத்தமட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல்வாதி ஆகலாம். நான் ஒரு அரசியல்வாதி என்ற முறையில் எல்லோரும் என் துறைக்கு வர ஆசைப்படுத்துவது எனக்கு மகிழ்ச்சிதான் எனக்கூறினார்.   

சார்ந்த செய்திகள்

Next Story

'தொகுதிக்கு எதுவும் செய்யலன்னா கல்லால் கூட என்னை அடிங்க' - தமிழிசை பிரச்சாரம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
'Hit me even with a stone if you don't do anything for the constituency'-Tamil campaign

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கெனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், சோழிங்கநல்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழிசை சௌந்தரராஜன் அங்கிருந்த பெண்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''நான் வந்து சும்மா ஓட்டு கேட்டு விட்டுப் போகின்ற ஆளில்லை. உங்கள் சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என நினைக்கிற ஆள். அதனால் எனக்கு வாய்ப்பு கொடுங்கள். ஒருவேளை நான் சரியா செய்யவில்லை என்றால் என்னிடம் கேள்வி கேளுங்கள். என்னை அடிக்கக் கூட செய்யுங்கள். கல்லை எடுத்துக்கூட தூக்கி என்னை அடியுங்கள்'' எனப் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

Next Story

'இதற்கு முதல்வரும் வைகோவும் பதில் சொல்லியே ஆக வேண்டும்' - தமிழிசை செளந்தரராஜன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'The Chief Minister and Vaiko should answer this'-Tamilisai interview

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'ஈரோட்டில் மதிமுக எம்.பி இறந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்து விடும் என்று பிரதமர் சொல்லி இருந்தார். நன்றாக பணியாற்றிக் கொண்டிருந்த மதிமுக நாடாளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறது இவர்களின் குடும்ப ஆசை, வாரிசு ஆசை. இதற்கு நான் வைகோவையும் குற்றம் சாட்டுவேன். ஸ்டாலினையும் குற்றம் சாட்டுவேன்.

ஒரு அனுபவம் மிக்கவருக்கு சீட்டு கொடுக்காமல் இப்படி நடந்துவிட்டது. வைகோ எதற்காக திமுகவை விட்டு வெளியே வந்தார். கலைஞர் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று வெளியே வந்தார். ஆனால் இன்று அவருடைய மகனுக்கு சீட்டை கொடுத்துவிட்டு ஒரு அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். நீட்டில் ஒரு தவறு நடந்த உடனே அதை உலக அளவில் வைத்து பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்வது தமிழகத்தில் தான் இன்று நடக்கிறது. மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும். வைகோவும் பதில் சொல்ல வேண்டும். இது வாரிசு அரசியலின் அபாயகரம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதே திமுகவில் உதயநிதிக்கு கிடைக்கின்ற அங்கீகாரம் சாதாரண தொண்டருக்கு கிடைக்கிறதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.