Skip to main content

 மோப்பநாய் லூசி உயிரிழப்பு; மரியாதை செலுத்திய காவல்துறை

Published on 29/07/2024 | Edited on 29/07/2024
sniffer dog Lucy passed away

வேலூர் மாவட்டத் துப்பறியும் நாய் படைப் பிரிவில் "மோப்பநாய் லூசி" கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சிறப்பாகப் பணி செய்து வந்தது. 2022 இல் ஓய்வு பெற்ற மோப்ப நாய் லூசி வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தது.

வேலூரில் உள்ளத் துப்பறியும் நாய் படைப் பிரிவு மையத்தில் மோப்பநாய் லூசியின் உடலுக்கு மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பி ரவிச்சந்திரன் மரியாதை செலுத்தினார். பின்னர் காவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

sniffer dog Lucy passed away

2014 ஆம் ஆண்டில் தமிழக அளவில் நடைபெற்ற வெடிகுண்டு கண்டறிதல் பிரிவில் மூன்றாம் இடம் பெற்றதும், வி.வி.ஐ.பி பாதுகாப்பு பணி வெடிகுண்டு சோதனையில் சிறப்பாகச் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்