Skip to main content

நீட், புதியக் கல்விக்கொள்கை குறித்து திரைப்பட இயக்குநர் கௌதமன் நடத்தும் கருத்தரங்கம்...!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

seminar by film director Gautham on new education policy and NEET ...!

 

 

திரைப்பட இயக்குனரும், தமிழர் பேரரசு கட்சியின் தலைவருமான கௌதமன் ‘புதிய கல்விக்கொள்கையின் பேராபத்தும் நீட் தேர்வினால் ஏற்படும் தொடர் மரணங்களும்’ எனும் தலைப்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு ஜூம் செயலி மூலம் கருத்தரங்கம் நடத்துகிறார். 

 

தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து தெரிவித்துவருகின்றனர். மத்திய அரசு மும்மொழி கொள்கை அமல்படுத்துவது குறித்து சொல்லிவரும் நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் இருமொழிக் கொள்கைத்தான் தமிழகத்தின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளனர். நீட் தொடர்பாக இதுவரை தமிழகத்தில் 13 மாணவர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக 3 மாணவர்கள் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் ‘புதிய கல்விக்கொள்கையின் பேராபத்தும் நீட் தேர்வினால் ஏற்படும் தொடர் மரணங்களும்’ எனும் தலைப்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு ஜூம் செயலி மூலம் கருத்தரங்கம் நடத்துகிறார், திரைப்பட இயக்குனரும் தமிழர் பேரரசு கட்சியின் தலைவருமான கௌதமன். 

 

இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள ஜூம் ஐ.டி. விவரத்தையும் பகிர்ந்துள்ளார். 

 https://us02web.zoom.us/j/88376632751?pwd=WTNJRFJHK2paWjdGRzIyS0RpUHFUZz09

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக் கொள்கை; மத்திய அமைச்சகம் திட்டவட்டம்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Union Ministry Scheme for New Education Policy for Classes 3, 4, 5

கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வந்தது. இந்த திட்டத்தை கடந்த கல்வி ஆண்டிலேயே, நாடு முழுவதும் அமல்படுத்தியது. ஆனால், இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த சூழலில் 2024 - 2025ஆம் கல்வி ஆண்டு வருகிற ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளதால், மாணவர் சேர்க்கைக்கான பணிகள் சில பள்ளிகளில் தொடங்கியுள்ளன. 

இந்த நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘3,4,5 ஆகிய வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.

மேலும், பிரீ.கே.ஜி படிப்பில் சேர, மாணவர்களுக்கு மூன்று வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். எல்.கே.ஜி படிப்பிற்கு நான்கு வயதும், யு.கே.ஜி எனில் ஐந்து வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். முதல் வகுப்பு சேர்க்க வேண்டும் எனில் மாணவர்களுக்கு ஆறு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.