Skip to main content

சேலத்தின் சாராய சாம்ராஜ்யம்! போலீஸ் கமிஷனர் டென்ஷன்

Published on 18/07/2018 | Edited on 18/07/2018
san


''சேலத்தில் ராம ராஜ்ஜியம் நடப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சந்துக்கடைகள் மூலமாக மது விற்பனை நடப்பதாக மக்களிடம் இருந்து புகார்களை பார்க்கும்போது என் நம்பிக்கை பொய்த்துவிட்டது. குற்றங்களை தடுக்காத இன்ஸ்பெக்டர்கள் மீது கடுமையான ஆக்ஷன் எடுக்கப்படும்,'' என்று சேலம் போலீஸ் கமிஷனர் சங்கர் எச்சரித்துள்ளார்.


சேலம் மாநகரில் ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்குவதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து கடந்த பத்து நாள்களாக போலீசார் ரவுடிகளை கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த பரபர ஆக்ஷனில் கடந்த 9ம் தேதி 37 ரவுடிகள் உள்பட 57 பேரும், 12ம் தேதி 39 பேரும் கைது செய்யப்பட்டனர். 


இவர்களில் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் ஜவஹர், அறிவு என்கிற அறிவழகன், மணியனூர் வைத்தி, கி ச்சிப்பாளையத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சுலைமான், ஜான், டெனிபா, மோசஸ், ஜீசஸ், சிலம்பரசன், விக்கி என்கிற வி க்னேஷ், ஜான்சன்பேட்டைச் சேர்ந்த சத்தியா என்கிற போட்டி சத்தியா உள்ளிட்டோரும் அடங்குவர்.


ஆனாலும், கட்டப்பஞ்சாயத்து, வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பு, சட்டவிரோத மது விற்பனை போன்ற குற்றங்கள் குறைந்தபாடில்லை. 


இந்நிலையில் சேலம் மாநகர சட்டம் - ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் நேற்று நடந்தது. துணை கமிஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை மற்றும் அனைத்து இன்ஸ்பெக்டர்களும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியது முதல் முடியும் வரை போலீஸ் கமிஷனர் டென்ஷன் மோடிலேயே இருந்ததாகச் சொல்கின்றனர் இன்ஸ்பெக்டர்கள். 


ஒருகட்டத்தில் அவர், ''நான் சொன்ன வேலைகளை யாருமே சரிவர செய்வதில்லை. இன்ஸ்பெக்டர்கள் கடமைக்காக பணியாற்றினால் எப்படி? ரவுடிகளை கைது செய்யச்சொன்னால் ஒன்றுக்கும் ஆகாத போகாத ஆள்களை எல்லாம் கைது செய்து கணக்குக் காட்டுகிறீர்கள்,'' என விரக்தியும் கோபமும் கலந்த தொனியில் பேச ஆரம்பித்துள்ளார்.


''சேலம் மாநகரில் சட்டம் - ஒழுங்கு எல்லாம் சரியாக இருக்கிறது. இங்கு ஏதோ ராமராஜ்ஜியம் நடப்பதாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் பொதுமக்களிடம் இருந்து என் மொபைலுக்கு வரும் புகார்களைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை. மதுபானங்களை சந்துக்கடைகளில் பதுக்கி விற்கின்றனர். அவர்களை கைது செய்யச்சொல்லி பொதுமக்கள் போராடும் நிலை உள்ளது. 


உங்கள் பகுதியில் நடக்கும் குற்றங்களை தடுக்காவிட்டால் உங்களுக்குதான் அவமானம். மக்கள் இரவில் எந்தவித பயமுமின்றி நடமாட வேண்டும். இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் ரோந்து போகச் சொன்னால் அதையும் யாரும் சரிவர செய்ய மாட்டேன் என்கிறீர்கள். குற்றங்களை தடுக்காத இன்ஸ்பெக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என இன்ஸ்பெக்டர்களை கொஞ்சம் காட்டமாகவே எச்சரித்து அனுப்பி உள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கர் படுகொலையைவிட, நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது!!! -எவிடென்ஸ் கதிர்

Published on 25/06/2020 | Edited on 25/06/2020
hj

 

சங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருக்கும் தண்டனை குறைப்பு மற்றும் விடுதலை கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் இதுதொடர்பாக கூறும்போது, “கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி சங்கர் என்ற இளைஞர் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவருடைய மனைவி கவுசல்யா வெட்டப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று மீண்டார், அதாவது  ஒரு கூலிப்படை கும்பல் சங்கர், கவுசல்யா கடைவீதிக்கு செல்லும்போது, வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்றது. இதில் காயங்களுடன் கவுசல்யா பிழைத்துக்கொண்டார். சங்கர் அதே இடத்தில் பலியானார்.  இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது மிக அப்பட்டமான சாதிய ஆணவ படுகொலை என்பது அனைவருக்கும் தெரியும். இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு திருப்பூர் நீதிமன்றம் தண்டனை கொடுத்தது. சிலரை விடுதலை செய்தது. இதில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருந்தனர்.  தற்போது அந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பு கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய குற்றவாளியான சின்னசாமி விடுவிக்கப்பட்டுள்ளார். கூலிப்படையை சேர்ந்த சிலருக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற தீர்ப்பு என்பது மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. சங்கருக்கு நடந்த ஆணவ படுகொலையைவிட இந்த தீர்ப்புதான் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றம் கொடுக்கின்ற தீர்ப்புகளை மதிக்கின்றோம், ஏற்றுக்கொள்கிறோம் என்பது வேறு. அதில் உண்மை தன்மை இல்லை என்கிறபோது நாங்கள் மேல் முறையிட்டுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இந்த வழக்கிலும் அந்த சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

கவுசல்யா அந்த சம்பவத்தை நேரடியாக பார்த்த ஒரு சாட்சி, அவருடைய சாட்சியைத்தான் நீதிமன்றம் ஆதாரமாக எடுத்துக்கொண்டு தீர்ப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த தீர்ப்பை நான் வாசித்து பார்த்தேன். 311 பக்கங்கள் கொண்ட தீர்ப்பாக அது இருக்கின்றது. அந்த தீர்ப்பில் ஒரு இடத்தில் கூட இந்த கொலை சாதி ஆணவப்படுகொலை என்று பதிவு செய்யப்படவில்லை. இந்தியா முழுவதும் இது சாதிக்காக நிகழ்த்தப்பட்ட ஒரு படுகொலை என்று தெரிந்திருந்தாலும், நீதிமன்றத்தின் தீர்ப்பில் ஒரு வார்த்தை கூட அந்த மாதிரியான வாசகங்கள் இல்லை. அரசுதரப்பு நீதிமன்றத்தில் போதுமான நடைமுறைகளை செய்து குற்றவாளிகளை தப்பிக்க விட்டிருக்கக்கூடாது. ஆனால் அரசு அத்தகைய எந்த முயற்சியையும் செய்யவில்லை. இதில் இருந்தே தெரிகின்றது அவர்களுக்கு எத்தகைய அனுமானங்கள் இருந்திருக்கின்றது என்று. இன்னும் இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். 

 

Next Story

உடுமலை சங்கர் கொலை வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு...

Published on 20/06/2020 | Edited on 20/06/2020
Udumalai Shankar case to be heard day after tomorrow

 

உடுமலை சங்கர் கொலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நாளை மறுநாள் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கவுள்ளது.

இருவேறு சமூகத்தை சேர்ந்த கௌசல்யாவும், சங்கரும் 2015-ல் திருமணம் செய்து கொண்டனர். 2016 மார்ச் 13-ல் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.   

கௌசல்யா தந்தை உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. தண்டனையை எதிர்த்து 6 குற்றவாளிகளும், மூன்று பேர் விடுதலையை எதிர்த்து காவல்துறையும் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் நாளை மறுநாள் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.