Skip to main content

"கருணைக் கொலை செஞ்சிடுங்க ப்ளீஸ்...!" - சேலம் சிறைக் கைதி திடீர் போராட்டம்!

Published on 24/04/2021 | Edited on 25/04/2021

 

salem prison inmate sudden struggle

 

"நோய்த்தொற்றால் ஏற்பட்ட வலியால் உயிர் போகுது. அதனால் என்னை கருணைக்கொலை செய்து விடுங்கள்" என்று கூறி சேலம் சிறைக்கைதி திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

வேலூர் மாவட்டம் தொரப்பாடியைச் சேர்ந்தவர் கணபதி (34). கடந்த 2019ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கணபதி, கடந்த சில ஆண்டுகளாக சிறுநீர் பாதையில் ஏற்பட்ட நோய்த்தொற்றுப் பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்நிலையில், கணபதிக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவரை சேலம் மத்திய சிறையில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை (ஏப். 24) சிறைக்காவலர்கள் அழைத்து வந்தனர். அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஏற்கனவே மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

 

சிறுநீர் குழாயில் ஏற்பட்ட பாதிப்பால், கடந்த சில நாள்களாகக் கடும் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கரோனா நோயாளிகளுக்கு முன்னுரிமை அளித்து சிகிச்சைப் பணிகள் நடந்து வரும் நிலையில், கைதி கணபதிக்கு அறுவை சிகிச்சை தாமதம் ஆவதாகக் கூறப்படுகிறது.
 

ஏற்கனவே வாழ்வில் வெறுப்படைந்த கணபதி, நோயின் வலியாலும் துடித்து வந்துள்ளார். திடீரென்று அவர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். நோயுடன் தன்னால் வாழ முடியவில்லை. என்னை கருணைக் கொலை செய்து விடுங்கள் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

தகவல் அறிந்த அரசு மருத்துவமனை காவல்நிலைய காவல்துறையினர் விரைந்து வந்து அவரை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர் மீண்டும் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.