சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்குகளை விரைவாக முடித்துக் கொள்வதற்காக, வரும் 8ம் தேதி காலை 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.
மக்கள் நீதிமன்றம் மூலம் பாகப்பிரிவினை வழக்குகள், மோட்டார் வாகன இழப்பீடு கோரும் வழக்குகள், சிவில் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவழக்குகள், குடும்ப விவகார வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.
எனவே, பொதுமக்கள் யாருக்கேனும் நீதிமன்றத்தில் மேற்படி வழக்குகள் நிலுவையில் இருக்கும்பட்சத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தெரிவித்தால், உடனடியாக சட்ட அறிவிப்பு இருதரப்புக்கும் அனுப்பப்பட்டு, சட்ட ரீதியான தீர்வு காணப்படும். இவ்வாறு, சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான குமரகுரு தெரிவித்துள்ளார்.