Published on 03/03/2025 | Edited on 03/03/2025

இளம் எழுத்தாளர்களுக்கான உலகளாவிய எழுத்துப் போட்டி. இளம் எழுத்தாளர்களை வளர்ப்பதற்கான அதன் முயற்சியின் ஒரு பகுதியாக, லேர்னர் சர்க்கிளின் (Learner Circle) உலகெங்கிலும் உள்ள இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், “ரைட்டத்தான்” (Writathon) என்ற படைப்பு எழுத்துப் போட்டியைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது.
8 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் இந்த போட்டியில் பங்கேற்கலாம். போட்டியாளர்கள் கவிதை, சிறுகதை மற்றும் குறுநாவல் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். வெற்றி பெறும் படைப்புகளுக்கு ரூ. 20,000 ரொக்கப் பரிசு வெல்லும் வாய்ப்புள்ளது. குழந்தைகளை ஊக்குவிக்கும் பள்ளிகளுக்கும் சிறந்த பள்ளிக்கான ஊக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது. வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ரைட்டத்தான் ஒரு பொன்னான வாய்ப்பாகும்.