Skip to main content

'புத்தகம் புது பூமி’ என்ற தலைப்பில் பேசிய திரைக் கலைஞர் ரோகிணி

Published on 05/01/2024 | Edited on 05/01/2024

 

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் 47வது சென்னை புத்தகக் கண்காட்சியில் இரண்டாவது நாளான நேற்று அரங்கத்தில் நடைபெற்ற 'புத்தகம் புது பூமி’ என்ற தலைப்பில் திரைக் கலைஞர் ரோகிணி பேசினார். மற்றும் ‘வாழ்தல் இனிது’ பற்றி ஈரோடு மகேஷ் பேசினார். இந்த நிகழ்வில் பபாசி துணைத் தலைவர் நக்கீரன் ஆசிரியர் வரவேற்புரை வழங்கினார். அதேபோல், பபாசி செயற்குழு உறுப்பினர் அருணாச்சலம் நன்றியுரை ஆற்றினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“திமுக அரசு மீது மக்களுக்கு மதிப்பு இருக்கிறது” - நடிகை ரோகிணி பாராட்டு

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
"People have respect for the DMK government" - actress Rohini praises

“தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது போல் வேறெந்த மாநிலத்திலும் நலத்திட்டங்கள் செய்யப்படவில்லை. இதன்மூலம் திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்று நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மக்கள் ஒற்றுமை, மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்தி சேலத்தில் ஜன. 27ம் தேதி மினி மாரத்தான் போட்டி நடந்தது. மாணவ, மாணவிகள், பெரியவர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைப்பின் மாநில புரவலரான நடிகை ரோகிணி, திரைப்பட இயக்குநர் கெளதம்ராஜ், தமுமுக பொதுச்செயலாளர் ஹாஜாகனி, அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஆகியோர் பரிசுகள், வெற்றி கோப்பைகளை வழங்கினர். 

அப்போது நடிகை ரோகிணி செய்தியாளர்களிடம் கூறியது; “பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். அவருக்கு தமிழ்நாடு பிடித்திருக்கிறது என்பதற்காக வருவதாக கருதிவிடக்கூடாது. அவ்வாறு அடிக்கடி வருவதன் மூலமாவது தன்னை தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று பிரதமர் கருதுகிறார். தமிழகத்தின் தேவையை அவர் பூர்த்தி செய்தால் நன்றாக இருக்கும். வெறுமனே வந்துவிட்டுப் போவது மட்டும் போதாது. 

தாய்மொழியில்தான் நம் குழந்தைகள் கற்க வேண்டும். அவரவர் தாய்மொழியை முன்னெடுத்துப் படித்தால் எல்லா மொழிகளும் முக்கியத்துவம் பெறும். நம் மொழியை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும். ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராடித்தான் திராவிட இயக்கங்கள் வளர்ந்து உள்ளன. எப்போதும் நடக்கிற தாக்குதல் நடந்து கொண்டேதான் இருக்கும், நாமும் அதற்கான எதிர்வினையை ஆற்றிக்கொண்டே இருக்க வேண்டும். 

மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முதல்வர் கூறுகிறார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் மகளிர் உரிமைத் திட்டம், நூலகங்கள் திறப்பு, புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன. வேறு எந்த மாநிலமும் இந்தளவுக்கு நலத்திட்டங்களைச் செய்யவில்லை. இவற்றின் மூலம் திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்றார் நடிகை ரோகிணி. 

Next Story

“சும்மா வந்துவிட்டு போனால் மட்டும் பத்தாது” - மோடியை விமர்சித்த ரோகிணி

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
rohini about prime minister modi tamilnadu visit

சேலத்தில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. சிறிய குழந்தைகள் முதல் 77வயதான முதியவர்கள் வரை கலந்துகொண்டனர். இந்த போட்டியை நடிகை ரோகிணி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். 

அப்போது மோடியின் தமிழக வருகை குறித்து கேள்விக்கு, “பிரதமர் அடிக்கடி தமிழ்நாட்டிற்குத் தான் வருகிறார். தமிழ்நாடு, அவருக்கு அவ்ளோ பிடித்துவிட்டது போல. ஆனால் அப்படி இல்லை. தொடர்ந்து வந்தாலாவது தமிழக மக்கள் தன்னை ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறார். அவரது பதவிக்குண்டான எல்லா மரியாதையையும் நாம் கொடுக்கிறோம். அதே நேரத்தில் தமிழகத்துக்குத் தேவையான அனைத்துமே, ஒன்றிய அரசாங்கம் செய்தால் நல்லாயிருக்கும். சும்மா வந்துவிட்டு போனால் மட்டும் பத்தாது” என்றார். 

மேலும், “தாய் மொழி ரொம்ப முக்கியம் என மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். அந்த தாய் மொழியில் தான் நம் குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் தாய் மொழிகளை முன்னெடுத்து படித்தோமேயானால், அனைத்து மொழிக்கான முன்னேற்றமும் இருக்கும். நாம் நம்முடைய தாய் மொழியை உயர்த்திப் பிடிக்க வேண்டும். மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும். அதை ஒவ்வொரு சிட்டிசனும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பது முதன்மையான கடமை” என்றார்.