Skip to main content

ஓடும் காரை வழிமறித்த கொள்ளையர்கள்... புகாரின் பேரில் துரத்தி பிடித்த காவலர்கள்!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

The robbers who misled the running car ... police who chased after the complaint

 

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை இருபத்து நான்கு மணி நேரமும் பரபரப்பாக இருக்கும். இந்த சாலையில் சென்னையைச் சேர்ந்த ஆர்கிடெக்ட் பணி செய்துவரும் பாலசுப்பிரமணியன் என்பவர், சொந்த வேலையாக நெய்வேலி வந்துள்ளார். அங்கு வந்து பணியை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் (06.10.2021) தனது நண்பர்களுடன் நெய்வேலியிலிருந்து காரில் சென்னைக்கு சென்றுகொண்டிருந்தார். அவர்கள் சென்ற கார் திண்டிவனம் அருகே ஒலக்கூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, இரண்டு வாலிபர்கள் காரை உரசுவது போல் சென்று காரை வழிமறித்து நிறுத்தினார்கள். பதற்றத்துடன் காரிலிருந்து இறங்கிய சுப்பிரமணியத்திடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

 

அவர் தனது பாக்கெட்டில் இருந்து 200 ரூபாய் பணத்தை எடுத்து கொடுக்க முயன்றார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் சாலையோரம் உள்ள கிராமத்திலிருந்து வந்த இருவர், கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு அருகில் வந்தனர். அவர்களைக் கண்டதும் மிரட்டிப் பணம் கேட்டுக்கொண்டிருந்த இளைஞர்கள் இருவரும் தங்களைப் பிடித்துவிடுவார்கள் என்று பயந்து தங்களது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். பாலசுப்ரமணியம், அதே  நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் காரை மறித்த கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியது குறித்து புகார் கூறியுள்ளார்.

 

உடனடியாக நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கொள்ளையர்கள் தப்பிச் சென்ற திசையில் வேகமாக தங்களது வாகனத்தை செலுத்தி, ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே பொதுமக்கள் உதவியுடன் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்தனர். அதில் ஒரு கொள்ளையன் தப்பிச் சென்றுவிட, ஒருவரை மட்டும் கைது செய்து ஒலக்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை செய்ததில், அவர் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த பிரசாத் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பிரசாத் வைத்திருந்த இருசக்கர வாகனம், பணம் பறிக்க பயன்படுத்திய கத்தி ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேலும்  தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்