Skip to main content

மன்சூர் அலிகானை விடுதலை செய்! இல்லையென்றால் எஸ்.வி. சேகரை கைது செய்! பாரதிராஜா கண்டனம்

Published on 19/06/2018 | Edited on 19/06/2018

மன்சூர் அலிகானை விடுதலை செய்! இல்லையென்றால் எஸ்.வி. சேகரை கைது செய்! என்று திரைப்பட இயக்குநனர் பாரதிராஜா கூறியுள்ளார்.


தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜனநாயக ஆட்சியில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு கிடையாது எல்லோரும் ‘இந்நாட்டு மன்னர்கள்’ என்று சொன்னார்கள். வெளிநாட்டில் பேச்சு சுதந்திரத்திற்கோ, கருத்துச் சுதந்திரத்திற்கோ ஆளும் அரசுகளோ, மற்ற யாருமோ தடைபோடுவதில்லை. ஒன்றின் மீது நம்முடைய நம்பிக்கை இழக்கும் போது தான் விமர்சனம் அங்கே எழுகிறது. தற்போது தமிழகத்தில் தினமும் பிரச்சனைகள், போராட்டங்கள் என்று ஒரு போர்க்களமாகவே மாறியிருக்கிறது. நம் தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்த முயல்வதால் தான் இந்த விளைவுகள் ஏற்படுகின்றன.
 

சேலம் பசுமை வழிச்சாலை பற்றி மன்சூர் அலிகான் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய பேச்சு தவறு தான். உணர்ச்சி மேலிடம் போது கோபம் வெளிப்படுவது இயல்பு. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று அவசர அவசரமாக, அவரை வீட்டிலேயே கைது செய்ய முனைந்த காவல் துறை, பெண்களைத் தரக்குறைவாகப் பேசி, இழிவுப்படுத்தி தமிழகத்தில் குழப்பத்தையும், பிரச்சனையையும் ஏற்படுத்திய எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?



 

Release Mansoor Ali Khan! Otherwise SV Arrest the collector

உடனடியாக கைது செய்ய வேண்டிய அவரை விட்டுவிட்டு மாறாக சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து பாதுகாக்கிறீர்கள். ஒரு கண்ணில் வெண்ணெயும், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்கும் உங்கள் ஜனநாயகம் கேலிக்கூத்தாக இருக்கிறது. மன்சூர் அலிகான் கைது செய்வதில் காட்டிய அக்கறையை, தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் எஸ்.வி.சேகர் போன்ற நபர்களை கைது செய்தால் உண்மையான ஜனநாயக நாடாக இருக்கும். இல்லையென்றால் இவர்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கப்படும் என்பதை கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.

 

தன் வீட்டிற்கோ, தன் சொந்தத்திற்கோ மன்சூர் அலிகான் குரல் கொடுக்கவில்லை, மக்களின் நலனிற்காகவே பேசினார். ஆகையால் அவரை உடனடியாக விடுதலை செய்யுங்கள் இல்லையென்றால் எஸ்.வி. சேகரை கைது செய்து, ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான். பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் அவர், தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவரது வழக்கமான நக்கல் கலந்த பாணியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையடுத்து பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் தற்போது மன்சூர் அலிகான் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

சில தொகுதிகளில் சில வேட்பாளர்கள்! சிகரம்தொட சிறகடிக்கிறார்கள்!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nalysis of candidates Mansoor Ali Khan, CS Karnan, Prema

நடைபெறவிருக்கும்  நாடாளுமன்றத் தேர்தலில்  திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக  உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்கினாலும். ஒபிஎஸ் உள்ளிட்ட சிலர் தங்களது பலம் என்னவென்பதை நிரூபிப்பதற்காகப் போட்டியிடுகின்றனர். முன்பு பிரபலமாக இருந்த  சிலர்,  இப்போது சத்தமே இல்லாமல், கவனத்தை ஈர்க்கும் வகையில் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அத்தகையவர்களில் மூவரைப் பார்ப்போம்.

சி.எஸ்.கர்ணன்

முன்னாள் நீதிபதி இவர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவர், தன்னுடன் பணியாற்றும் நீதிபதிகள், தாம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தன்னைத் துன்புறுத்துவதாகவும்,  தான் பழிவாங்கப்படுவதாகவும்  கடந்த 2011ஆம் ஆண்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் அளித்தார். இது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம், கர்ணனை சென்னையில் இருந்து கொல்கத்தா நீதிமன்றத்திற்கு மாற்றி,  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை ஏற்க மறுத்த கர்ணன், கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற உத்தரவுக்கு, அவரே  தடை விதித்தார்.  இது பெரிய பிரச்சனையாக மாறியது. இதனைத் தொடர்ந்து,  அவர் உடனடியாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் 20 நீதிபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக, அவர்களின் பெயர்கள் அடங்கிய கடிதத்தை பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பி வைத்தார்.

உச்சநீதிமன்றம், தாமாக முன்வந்து நீதிபதிகளுக்கு எதிராகக் கருத்து தெரிவித்த கர்ணனுக்கு, பிப்ரவரி 13ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியது. எனினும் அவர் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகவும் இல்லை; விளக்கம் அளிக்கவும் இல்லை. அடுத்து  கர்ணன் மீது  அவதூறு வழக்கு பதிவு செய்தது உச்சநீதிமன்றம். இவ்வழக்கு பதிவானதும் கர்ணன் தலைமறைவானார். நீதிபதியாக இருந்த கர்ணன், தலைமறைவான நிலையிலேயே ஓய்வும் பெற்றார். இந்த வழக்கில் இவருக்கு ஆறுமாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை அருகே பதுங்கியிருந்த சி.எஸ்.கர்ணனை காவல்துறையினர் கண்டுபிடித்து, 2017 ஜூன் 20ஆம் தேதி கைது செய்து, கொல்கத்தா பிரசிடென்சி சிறையில் அடைத்தனர். இடையில் இவர் பலமுறை பிணை கேட்டும் நீதிமன்றம், கர்ணனுக்கு ஜாமீன் வழங்கவில்லை. இதனால்,  6 மாதம் சிறைவாசம் முடிந்த பிறகே, கர்ணன் சிறையிலிருந்து வெளியே வந்தார். நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சி.எஸ்.கர்ணன், ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சியின் சார்பில், மத்திய சென்னையில் போட்டியிடுகிறார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்ணனின் இயற்பெயர் கருணாநிதி. ஆனால், 1991இல் தனது பெயரைக் கர்ணன் என மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ச.பிரேமா

nalysis of candidates Mansoor Ali Khan, CS Karnan, Prema

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, திடீரென ஒருநாள் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்த பெண்மணி,  நான் ஜெயலலிதாவின் மகள் என்று மீடியாக்களிடம் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தனது பூர்வீகம் மைசூரு என்றும், தற்போது பல்லாவரத்தில் தங்கியிருப்பதாகவும் கூறிய அவர், ஜெயலலிதாதான் தனது தாயார் என்று சத்தியம் செய்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க பிரேமா என்ற ஜெயலட்சுமி மறுத்துவிட்டார். இந்த பிரேமா, தற்போது  தேனி தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கியிருக்கிறார்.

நடிகர்  மன்சூர்  அலிகான்

nalysis of candidates Mansoor Ali Khan, CS Karnan, Prema

பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான், இந்த முறை வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆரம்பத்தில் பாமக ஆதரவாளராக இருந்த மன்சூர் அலிகான், பின்னர் புதிய தமிழகம் கட்சியில் சேர்ந்தார். 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட மன்சூர் அலிகான், மாட்டுவண்டியில் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்தார்.  அந்தத் தேர்தலில் 87,429 (13.28%) வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்து ஆச்சரியப்படுத்தினார்.

அதன்பிறகு, நாம் தமிழர் கட்சியில் சேர்ந்த மன்சூர் அலிகான், 2019  திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு 54957 (4.73 %)வாக்குகளைப் பெற்றார். அண்மையில் இந்திய ஜனநாயகப் புலிகள் எனும் பெயரிலான கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கும் மன்சூர் அலிகான்,  இந்த முறை வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் பலாப்பழம். பெரிதினும் பெரிது கேள் என்ற உத்வேக வார்த்தையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, தேர்தல் களத்தில் டஃப் கொடுக்கிறார்கள் இவர்கள்!