Skip to main content

தமிழகம் உள்பட நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடட்டம்!

Published on 16/06/2018 | Edited on 16/06/2018
ramzan


ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகை தமிழகம் உள்பட நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ரமலான் பண்டிகையையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அழகுற காட்சியளிக்கின்றன. காலையிலிருந்தே பள்ளி வாசல்கள் முன் திரளும் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துக் கூறி மகிழ்ந்தனர். புத்தாடை அணிந்தும் இனிப்புகளை மற்றவர்களுக்கு வழங்கியும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நாளின் முக்கிய நிகழ்வான பெருநாள் தொழுகைக்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
 

ramzan

 

 

 

சென்னை திருவல்லிக்கேணி பிரதான சாலையில், ரமலான் பண்டிகை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பிரியாணியை சமைத்துவரும் இஸ்லாமியர்கள் அவற்றை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தயார் செய்து வருகின்றனர். இஸ்லாமியர்களுக்கு பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் ரமலான் வாழ்த்து கூறி வருகின்றனர்.
 

 

ramzan


இதேபோல், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னை மண்ணடியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ரசிகர்களுக்கு தடியடி - சல்மான் கான் வீட்டில் பரபரப்பு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
police lathi charge in Salman Khan fans

ரமலான் பண்டிகை இன்று (11.04.2024) கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்திருந்தார். அதன்படி இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் காலை முதலே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ரமலான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மற்றும் தனது பிறந்தநாளின் வீட்டின் முன் கூடியிருக்கும் ரசிகர்களைச் சந்திப்பார் சல்மான் கான். அந்த வகையில் இன்று மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டின் முன்பு, ரமலான் வாழ்த்து பெற அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் கூடியிருந்தனர். அப்போது அவர்கள் ஆரவாரம் செய்து கூச்சலிட்டனர். அவர்களால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அவர்களை தடியடி நடத்தி போலீஸார் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

சல்மான் கான், தற்போது ஏ.ஆர் முருகதாஸுடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை சஜித் நதியாத்வாலா தயாரிக்க அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில், ரமலான் நாளான இன்று படத்திற்கு சிக்கந்தர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள்” - விஜய்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
vijay ramzan wishes

ரமலான் பண்டிகை இன்று (11.04.2024) கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்திருந்தார். அதன்படி இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் காலை முதலே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் ஈத்கா மைதானம் மற்றும் கோவை கரும்புக்கடை இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ரமலான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய், சமூக வலைத்தளப்பக்கம் வாயிலாக ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

த.வெ.க எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் சார்பாக பகிர்ந்துள்ள பதிவில், “புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிடப்பட்டுள்ளது.