Skip to main content

தமிழகத்தில் ஆறு எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு!

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

rajya sabha mps elected announced tn assembly secretary

அதன்படி அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமி, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 


அதேபோல் திமுக சார்பில் போட்டியிட்ட, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, திருச்சி சிவா ஆகியோர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர். 

 

சார்ந்த செய்திகள்