ஸ்டெட்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 10 கிராம பொதுமக்கள் நடத்திய பேரணியில் கல்வரம் ஏற்பட்டு போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 11 உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது:
’’மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு.’’