Skip to main content

ஈயை கூட அடிக்கமாட்டார் எடப்பாடி- ராஜேந்திர பாலாஜி காட்டம்!!

Published on 12/01/2019 | Edited on 12/01/2019

 

rajendra balaji

 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசுகையில்,

 

மக்களுக்கு பிடித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கலைக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே பலர் செயல்பட்டு வருகின்றனர். அவரை அகற்றவோ, எதிர்க்கவோ எவருக்கும் திராணி கிடையாது. திராணி, தெம்பு இல்லாத சிலர் இந்த மாதிரி சுற்றுவலையை பின்னிக்கொண்டு மறைமுகமான குற்றசாட்டை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். எடப்பாடி ஈயை கூட அடிக்கமாட்டார் அவரா போய் கொலை செய்ய தூண்டிவிடுகிறார். இது எல்லாம் எதிர்கட்சியினுடைய சதிதான்  எனக்கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்