Skip to main content

அதிகாரிகளை  பொம்மையாக்கி எருக்கம் பூ மாலை சாத்தி நூதன போராட்டம்! 

Published on 25/09/2018 | Edited on 26/09/2018
nr

 

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்ல தண்ணீர் குளம் மற்றும் பொதுக் களத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.    ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் அகற்றவில்லை. 
மேலும்,  கழிவு நீர் சாக்கடையை தடுத்து குளத்திற்கு செல்லாமல் திருப்பிவிட வேண்டும்,  நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கிராம சபையில் நிறைவேற்றிய  தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போரட்டங்கள் நடத்தி வந்தனர். 

 

nrr

 

இந்நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலந்தாழ்த்தி வரும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அப்பகுதி மக்கள் அதிகாரிகளை பொம்மையாக சித்தரித்து, நல்லூர் பேருந்து  நிலையத்திலிருந்து ஒன்றிய அலுவலகம்  நோக்கி கண்டன முழக்கங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர். 

 

பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு  நிர்வாக அதிகாரிகளின் உருவ பொம்மைக்கு  எருக்கன்  பூ மாலை அணிவித்து நூதன  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நூதன போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அலுவலகம் முன்பு வைக்கப்பட்ட பேனர்; மாவட்ட கவுன்சிலர் முடிவால் ஏற்பட்ட பரபரப்பு!! 

Published on 04/06/2021 | Edited on 04/06/2021
Banner placed in front of the office; collapsion caused by the decision of the District Councilor

 

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முகப்பில் கடந்த ஆண்டு கரோனா பரவல் சமயத்தின் போது பெரிய அளவில் விழிப்புணர்வு பேனர் ஒன்று அங்கு  வைக்கப்பட்டது. அதில் முகக்கவசம் அணிவது சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, கைகளை சுத்தம் செய்வது ஆகிய விழிப்புணர்வு படங்கள், வாசகங்கள் இடம் பெற்று இருந்துள்ளது. இந்த பேனர் மேல் பகுதியில் பிரதமர் மோடி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்தன.

 

கரோனா விழிப்புணர்வு வாசகம் இடம்பெற்ற பேனர் என்பதால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு அதே இடத்தில் அந்த பேனர் தொடர்ந்து வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை திமுக மாவட்ட கவுன்சிலர் சக்தி விநாயகம் என்பவர் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வளர்ச்சிப் பணிகள் குறித்து விவரம் கேட்பதற்கு வந்துள்ளார். அப்போது அவர் முன்னாள் முதல்வர்கள் படங்கள் எப்படி அதில் இடம் பெறலாம் என அந்த விழிப்புணர்வு பேனர் அவரது கண்களை உறுத்தியது. 

 

நடப்பது எங்கள் ஆட்சி இப்போது முன்னாள் முதல்வர்கள் படம் எப்படி அதில் இடம்பெறலாம் அலுவலகத்திற்கு உள்ளே சென்ற சக்தி விநாயகம் அங்கிருந்த அலுவலர்கள் மூலம் அந்த பேனரை அகற்றுமாறு உத்தரவிட்டார். ஊழியர்களும் அந்த பேனரை அப்புறப்படுத்தினார்கள். அதன் பிறகு ஒன்றிய ஆணையர் விஜயா அவர்கள் அலுவலகம் வந்துள்ளார். பேனர் அகற்றப்பட்டதை அலுவலர்களிடம் கூறினார். விழிப்புணர்வு வாசகம் இடம்பெற்ற பேனர் இருப்பது நல்லது தானே வேண்டுமானால் அதில் இடம் பெற்றுள்ள முன்னாள் முதல்வர்கள் படங்களை மறைத்து விட்டு அதே இடத்தில் அந்த விழிப்புணர்வு பேனர் வைக்கலாமே என்று ஊழியர்களிடம் ஆலோசனை கூறியுள்ளார். 

 

அதன்படி அந்த இடத்தில் முன்னாள் முதல்வர்கள் படங்களை மறைத்து கரோனா விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்ற அந்த பேனர் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒன்றிய அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்கு வந்த மக்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

Next Story

''நகராட்சிக்கு இடத்தை விற்பனை செய்யாதே''-தொழிலதிபரின் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏகஸ்பா என்கிற பகுதியில் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த பகுதி முழுவதும் அடித்தட்டு, சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியாகும், இந்த பகுதியில் அமைவதன் மூலம் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும், அங்கு வாழ முடியாத நிலை ஏற்படும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

 Do not sell land to municipalities - civilians who blocked businessman's house


அதனையும் மீறி நகராட்சி நிர்வாகம், தங்களுக்கு அங்கு சொந்தமாக இடம்மில்லாத நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, ஆம்பூரை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணன்லால் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை நகராட்சிக்கு விற்பனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தங்கள் பகுதியில் உள்ள லாலின் இடத்தை நகராட்சிக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும், வேறு எதற்காகவாவுது பயன்படுத்திக்கொள்ளுங்கள், வேறு யாருக்காவது விற்பனை செய்யுங்கள், நகராட்சிக்கு விற்பனை செய்யாதீர்கள் என ஏகஸ்பா பகுதி பெண்கள் பலர், லால் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதுப்பற்றி போலீஸாருக்கு தகவல் செல்ல, அவர்கள் வந்து பொதுமக்களை அப்புறப்படுத்தினர். லால் சார்பாக பொதுமக்களிடம் பேசியவர்கள், அவர் இடத்தினை விற்கவில்லை, நகராட்சி நிர்வாகம் தான் வலுக்கட்டாயமாக கேட்கிறது என தகவலை கூறியபின்பு மக்கள் அங்கிருந்து கலைந்துசென்றுள்ளனர்.

பொதுமக்களின் எதிர்ப்பால் நான் இடத்தினை விற்பனை செய்ய விரும்பவில்லையென நகராட்சி அதிகாரிகளிடம் லால் சொல்ல, அவரை சமாதானப்படுத்தி இடத்தினை வாங்கும் பணியில் தீவிரமாக உள்ளனர் அதிகாரிகள்.