Skip to main content

"குடியிருக்கும் இடத்தைக் காலி செய்ய சொல்கிறார்கள்" - உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

Public besieged Chidambaram Assistant Collector office

 

குடியிருக்கும் இடத்தை வக்ஃப்போர்டு இடம் என்று கூறுவதை கண்டித்து சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தை பள்ளிப்படை ஊராட்சிக்கு உட்பட்ட பொது மக்கள் முற்றுகையிட்டு உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

 

சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை ஊராட்சியில் பூதகேணி, ஏஆர்பி நகர் உள்ளிட்ட15-க்கும் மேற்பட்ட நகர் உள்ளது. இந்த இடங்கள் அனைத்தும் வக்ஃப்போர்டுக்கு சொந்தமான என்று அறிவித்து அனைவரையும் வெளியேற்ற முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் திங்கட்கிழமை காலை அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுக் குடியிருக்கும் இடம் எங்களுக்கு சொந்தமானது என்று கூறி உரிய ஆவணங்களுடன் உதவி ஆட்சியர் ஸ்வேதாசுமனிடம் தனித்தனியாக மனு அளித்தனர்.  

 

இதுகுறித்து மனு அளிக்க வந்த பொதுமக்கள் கூறுகையில், “நாங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் முன்பே அப்பகுதிகளில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் நாங்கள் பள்ளிப்படை ஊராட்சிக்கு உட்பட்ட இடங்கள் வக்ஃப்போர்டுக்கு சொந்தமானது எனக் கூறி வக்ஃப்போர்டு நிர்வாகம் எங்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற முயற்சி செய்து வருகிறது. எங்களிடம் உள்ள பட்டா , பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரம். மின் இணைப்பு எங்கள் பெயரில் வாங்கி உள்ள மின் இணைப்பு ரசீது ஆகிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளது.

 

மேலும் எங்களது மனையை விற்கச் சென்றால் சிதம்பரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அந்த இடம் வக்ஃப்போர்டுக்கு சொந்தமான இடம் என்று கூறி பத்திரப்பதிவு செய்ய மறுக்கிறார்கள். வீடு கட்ட கடன் வாங்க முடியாத நிலையில் உள்ளோம். நாங்கள் அந்த பகுதியில் இடம் வாங்கி சிதம்பரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தான் பத்திரப்பதிவு செய்துள்ளோம். இப்போது இதுபோல திடீரென கூறுவது எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து எங்களிடம் உள்ள ஆவணங்களை வைத்துப் போராடுவோம்” என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.