Skip to main content

நாடு முழுவதும் 100 கிளஸ்டர் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன, தமிழகத்தில்... -நிர்மலா சீதாராமன்

Published on 02/11/2018 | Edited on 02/11/2018
nirmala seetharaman

 

பொதுத்துறை வங்கிகளில் உடனடியாக கடன் பெற விண்ணப்பிக்கும், "PSB loans in 59 minutes portal" என்ற  இணையதள சேவையினை பிரதமர் நரேந்திர மோடி  இன்று புதுடில்லி விஞ்ஞான்பவனில்  துவக்கி வைத்தார். இதையொட்டி கோவை மாநகராட்சி கலையரங்கத்தில் இந்த நிகழ்ச்சியை  சிறு,குறு,நடுத்தர தொழில் முனைவோர் நேரலையாக பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன், அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

நேரலை நிகழ்ச்சி துவங்கும் முன்பாக பேசிய அமைச்சர் வேலுமணி,  தமிழகத்தில் சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்கு மாநில அரசு பல்வேறு  நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவித்தார். 59 நிமிடத்தில் வங்கி கடன் கிடைக்கும் இந்த திட்டம் தொழில்முனைவோருக்கு பயனுள்ள வகையில் இருக்கும் எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
 

இதனைத்தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நமது நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சியில் 28.7 சதவீதம் சிறு, குறு, தொழில்களின் பங்கு இருப்பதாக தெரிவித்தார். மேலும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் ஏற்றுமதியில் 25 சதவீதம் பங்கு வகிப்பதாகவும், உற்பத்தி துறையில் ஜி.டி.பியில் 6 சதவீதம் வகிப்பதாகவும் தெரிவித்த மத்திய அமைச்சர், சிறு, குறு தொழில்களில்  20 மில்லியனுக்கும் மேலாக தொழிலாளர்கள் இருக்கின்றனர் என்றும் தெரிவித்தார். சின்னச்சின்ன  தொழில்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கின்றது என தெரிவித்த நிர்மலா சீதாராமன், நாட்டின் இயற்கை வளத்திற்கு உகந்த்தாக சிறு, குறு தொழில்கள் இருக்கின்றது எனவும் தெரிவித்தார். 
 

பல்வேறு அமைச்சகத்தின் கீழ் இருக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அதை நிதித்துறையின் கீழ் கொண்டுவந்து மத்திய அரசின் அனைத்து பலன்களையும் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். நாடு முழுவதும் 100 கிளஸ்டர் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன, தமிழகத்தில் கோவை, திருவள்ளூர், மதுரை, திருச்சி உட்பட 7 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் மத்திய அமைச்சர், மத்திய அரசு அதிகாரி, மாநில அரசு அதிகாரி ஆகியோர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டு, மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் சிறு, குறு, நடுத்தர தொழில்களும் சென்று சேர்கின்றதா என்பதை உறுதி செய்யவும், அதை மேம்படுத்த இருப்பதாகவும், சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்காக பிரதமர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார் எனவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த திட்டங்களின் ஒரு பகுதியாகவே 59 நிமிடத்தில் லோன் கிடைக்கும் திட்டத்தை பிரதமர் இன்று துவங்கி வைக்கின்றார் எனவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் டிசம்பர் 18இல் தொடக்கம்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
The cm with the People program was launched on December 18

தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 18 ஆம் தேதி (18-12-2023) கோயம்புத்தூரில் தொடங்கி வைக்கவுள்ளார்.

மக்களுடன் முதல்வர் என்ற இத்திட்டத்தில், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் போன்ற அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெறுவதற்கு முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக வரும் 18-12-2023 ஆம் தேதி முதல் 06-01-2024 வரை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகரப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளிலும் 1745 முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்கள் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்கள் நீங்கலாக ஏனைய மாவட்டங்களில் நடத்தப்படும்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிவுற்றவுடன், 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து 31-1-2024 வரை மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். முதற்கட்டமாக, நகர்ப்புறங்களில் நடத்தப்படும் முகாம்கள் முடிவுற்ற பின்னர், அடுத்த கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்த ஆவண செய்யப்படும்.

இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் மக்களின் கோரிக்கைகளைப் பெற்று பதிவு செய்வார்கள். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ரூ. 1.4 கோடி மோசடி; பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

1.4 crore issue 4 people incident including a BJP executive

 

கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

காரைக்குடியைச் சேர்ந்த பாஜக மாநில விவசாய அணியின் துணைத் தலைவர் ராஜசேகர் உட்பட 4 பேர், 70 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி 1.4 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது குறித்து இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிந்தர் பால் சிங் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

 

அந்தப் புகாரின் பேரில், பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் ராஜசேகர் உட்பட போரூரைச் சேர்ந்த ரஜிதா மெர்னல்சன், கே.கே. நகரைச் சேர்ந்த ராமு, வளசரவாக்கத்தைச் சேர்ந்த தசரதன் என 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் நான்கு பேரிடம் இருந்து ரூ.1.01 கோடி ரொக்கப் பணம் மற்றும் 2 கார்கள், 2 செல்போன்கள் மற்றும் போலி முத்திரைத் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.