Skip to main content

அனைவரும் தமிழர்கள் என்ற ஒரே உணர்விற்காக திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட நிகழ்ச்சி மீண்டும் செயல்படும்! - கனிமொழி

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

The program started under the DMK regime for the same feeling that all are Tamils ​​will be active again!

 

நாட்டுப்புறக் கலைஞர்களால் நடத்தப்படும் 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உறுதியளித்துள்ளார்.

 

கடந்த திமுக ஆட்சியின்போது, தமிழக அரசு சார்பில், பழம்பெரும் நாட்டுக் கலைகளை வளர்த்தெடுக்கவும் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டவும் ‘சென்னை சங்கமம்’ எனும் பெயரில் கலை நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், தை முதல் நாள் தொடங்கப்படும் இந்த விழா ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்படும். 

 

கிராமிய கலைகளை வளர்க்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் அனைவரும் தமிழர்கள் என்ற ஒரே உணர்விற்காகவும், சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், தெருக்கூத்து, பாவைக் கூத்து, கும்மி ஆட்டம், தாரைத் தப்பட்டை, மயிலாட்டம், பொம்மலாட்டம், கொம்பு இசை, பறையாட்டம், கிழவன் - கிழவி ஆட்டம், காவடி ஆட்டம், புலி ஆட்டம், கோலாட்டம், கோமாளிக் கூத்து ஆகியவை இடம் பெற்றிருந்தன. அதேபோல் சிலம்பம், வாள் வீச்சு, உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் போன்ற தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளும் இடம் பெற்றிருந்தன.

 

மேலும், திருநெல்வேலி, இருட்டுக் கடை அல்வா, மணப்பாறை முறுக்கு, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் பிரியாணி, பள்ளிப்பாளையம் சிக்கன், காரைக்குடி இட்லி போன்ற தமிழகத்தில் புகழ்பெற்ற அத்தனை உணவு வகைகளும், சங்கமத்தில் சங்கமித்திருந்தன. 2007-ல் தொடங்கப்பட்ட இந்த சங்கமம், அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்டது. அதையடுத்து, சுமார் பத்தாண்டு காலம் இந்த சங்கமம் கிடப்பில் போடப்பட்டது. 

 

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடைபெறாமல் உள்ளதால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, பலரும், சென்னை சங்கமம் மீண்டும் நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துவந்தனர். திமுக ஆட்சிக்கு வந்ததும், கரோனோ பாதிப்பு தணிந்த பிறகு சென்னை சங்கமம் மீண்டும் நடத்தப்படும் என ஏற்கனவே கனிமொழி உறுதி அளித்திருந்தார். 

 

இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியைச் சந்தித்த கிராமிய கலைஞர்கள் சிலர், சென்னை சங்கமம் நிகழ்ச்சியை மீண்டும் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற கனிமொழி, முதல்வரிடம் இதுகுறித்து தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

“அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு நல்ல பாடத்தை சொல்லித் தரக்கூடிய தேர்தல் இது” - கனிமொழி எம்.பி.!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
"ADMK, BJP This is an election that can teach parties a good lesson" - Kanimozhi MP

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மக்களவை தொகுதிகளுக்கான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியின் வேட்பாளார்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை இன்று (26.12.2024) மேற்கொண்டார்.

முன்னதாக தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளரும், தி.மு.க. துணைப் பொதுச செயலாளருமான கனிமொழி எம்.பி. பேசுகையில், “சில மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் கரிசல் பூமி கண்ணீரில் தவித்துக் கொண்டிருந்தபோது மத்திய அரசு கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் நான் இருக்கிறேன் என கருணையோடு ஓடி வந்தது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எந்த பகுதியில் இருந்தாலும் நிவாரணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மட்டும் தான். இந்திய சரித்திரத்திலேயே இல்லாத அளவிற்கு வீடு இடிந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாயை தி.மு.க. அரசு.

"ADMK, BJP This is an election that can teach parties a good lesson" - Kanimozhi MP

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டுவது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். ஆனால் இங்கு ஓட்டு கேட்க மட்டுமே வந்து கொண்டிருக்கிற பிரதமர் நிவாரண நிதியையும் கொடுப்பதில்லை. மாநிலத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியையும் கொடுப்பதில்லை. நம்மிடம் ஒரு ரூபாயை வரியாக வாங்கினால் 26 காசுகளை மட்டுமே கொடுக்கின்றனர். ஆனால் உத்தரப்பிரதேசத்திற்கு 2 ரூபாய் 2 காசுகள் என இருமடங்காக கொடுக்கின்றனர். இப்படி தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கிற, ஓர வஞ்சனை செய்துகொண்டிருக்க கூடிய பா.ஜ.க.வோடு இத்தனை ஆண்டுகளாக எடுத்த மக்கள் விரோத, சிறுபான்மையினருக்கு விரோதமான, விவசாயிகளுக்கு விரோதமான அத்தனை சட்டங்களையும் ஆதரித்து வாக்களித்தது அ.தி.மு.க.. ஆனால் இன்று பிரிந்துவிட்டோம் என்று நாடகமாடிக் கொண்டிருக்க கூடிய அ.தி.மு.க. உள்ளிட்ட இரண்டு கட்சிகளுக்கு நல்ல பாடத்தை சொல்லித் தர கூடிய தேர்தல் இது” எனப் பேசினார்.