Skip to main content

சென்னை அரசு ஆஸ்பத்திரியில் மாயமான கர்ப்பிணி கண்டுபிடிப்பு! குழந்தை என்ன ஆனது??? EXCLUSIVE NEWS

Published on 18/12/2018 | Edited on 18/12/2018
ga21


 


சென்னை அரசு மருத்துவமனையில் மாயமான கர்ப்பிணி பெண், திருத்தணியில் கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால் குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் உள்ளனர். 

 

சென்னை திருவல்லிக்கேணி லால்முகமத் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுதாகர். கால் டாக்சி டிரைவர். இவர் தனது உறவினரான காயத்ரியை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் காயத்ரி கர்ப்பமானார்.  நிறைமாத கர்ப்பிணியான காயத்ரியை கடந்த 15ம் தேதி இரவு திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் சுதாகர் அனுமதித்தார். 

 

அப்போது காயத்ரியை பரிசோதித்த மருத்துவர்கள், இன்று (ஞாயிறு) அல்லது நாளை (திங்கள்) குழந்தை பிறக்கும் என்று சொன்னதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மனைவியை பிரசவ வார்டில் அனுமதித்துவிட்டு, அங்கு ஆண்களுக்கு அனுமதி இல்லை என்பதால் சுதாகர் இரவு வீடு திரும்பினார். 
 

 

மறுநாள் காலை, மனைவியை பார்க்க சுதாகர் வந்தபோது, பிரசவ வார்டில் மனைவி இல்லை என்றதும், அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளார். அப்போது காயத்ரி நடைப்பயிற்சிக்கு சென்றிருப்பதாக கூறியுள்ளார்கள். உடனே இவர் மருத்துவமனை முழுவதும் தேடி பார்த்துள்ளார். மருத்துவமனை முழுவதும் காயத்ரியை காணவில்லை. 

 

இதையடுத்து உறவினர்களுக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். உறவினர்களும் காயத்ரி இங்கு வரவில்லை. காயத்ரியை பற்றி தகவல் தெரியவில்லை என்று பதில் அளித்துள்ளனர். பின்னர் பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எனது மனைவியை காணவில்லை, என திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சுதாகர் புகார் அளிதார். 

 

gayathri


 

புகாரை பெற்ற போலீசார் இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து மாயமான காயத்ரியை தேடி வருகின்றனர். 

 

இந்த நிலையில் காயத்ரி திருத்தணியில் உள்ளதாகவும், குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை என்றும் உறவினர்களுக்கு போன் செய்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு அங்கு விரைந்துள்ளனர். திருவல்லிக்கேணி போலீசார், திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்து அங்கு காயத்ரியை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி சொல்லிவிட்டு, அவர்களும் திருத்தணி விரைந்துள்ளனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.