Skip to main content

பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் - ஓ.பி.எஸ். விருப்பம்!

Published on 10/08/2020 | Edited on 11/08/2020

 

ad

 

இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் கரோனா தொற்று பொதுமக்களைக் கடந்து அரசியல் தலைவர்களையும் அதிகளவில் தாக்கி வருகிறது.

 

தமிழ்நாடு, டெல்லி, மத்தியப்பிரதேசம், என பல மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்தும் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், "வேறு காரணத்துக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது, அங்கு எனக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையில் எனக்குக் கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும். பிரணாப் முகர்ஜி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்