Skip to main content

சிலைகளை சிறைக் கைதிகளைப்போல அடைத்துவைக்க கூடாது; திருவாரூரில் பொன்.மாணிக்கவேல்

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

"சிலைகளை சிறைக் கைதிகளைப் போல அடைத்து வைக்கக் கூடாது, ஒவ்வொரு கோயிலிலும் பாதுகாப்பகம் அமைத்திட வேண்டும்".என்றார்  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேல்.

 

 

திருவாரூர் தியாகராஜர் கோவில் வளாகத்தில் செயல்பட்டு வரும் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 4539 சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த சிலைகளின் நிலை குறித்து அறிய, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொல்லியல் துறை அதிகாரிகளின் உதவியுடன் ஐந்தாவது கட்ட ஆய்வை மேற்கொண்டனர்.

 

pon.manikkavel interview

 

இந்த நிலையில் பொன்.மாணிக்கவேல் கூறுகையில், "திருவாரூர் சிலைகள் காப்பகத்தில் உள்ள 5359 சிலைகளில் 1897 சிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.  பாதுகாப்பதில் உள்ள ஏ.சி மிசின் எதுவும் வேலை செய்யவில்லை. பராமரிப்பு  இல்லாமல் இருக்கிறது. இதுகுறித்து அறநிலையத்துறை இணை ஆணையருக்கு கடிதங்கள் கொடுத்துவிட்டோம் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலைகழிக்கிறார்.

 

 

இத்தனை ஆயிரம் சிலைகள் இங்கு வைக்க போதிய இடவசதியும் இல்லை. அனைத்து சிலைகளும் வழிபாட்டுக்கு உரியதாகும். அவை அந்தந்த கோயில்களில் பாதுகாப்பகம் அமைத்து வைக்கவேண்டும். சிறைக் கைதிகளைப் போல சிலைகளை அடைத்து வைக்கக்கூடாது. வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு பின்னர் மீட்கப்பட்ட சிவபுரம் நடராஜர் சிலை மட்டுமே திருவாரூர் காப்பகத்தில் 31  ஆண்டுகளாக உள்ளது.

 

 

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரில் சிலை காப்பகம் அமைக்க பலமுறைக்கூறிவிட்டோம். இதுவரை ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை. காப்பகம் அமைக்க ஒன்றரை ஆண்டுகளாக அறநிலையத்துறை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. அவர்களிடம் பலமுறை போராடிவிட்டோம்,  உயர்நீதிமன்றத்தில் உடனடியாக ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் ஆய்வு பணிகளை விரைவில் நடைபெறுகிறது. இதில் சிலைகளில் உலோகத் தன்மை குறித்து முழுமையாக ஆய்வு செய்திட வேண்டும் என்பதால் உரிய கால அவகாசம் நீதிமன்றத்தில் கேட்க உள்ளோம். 

 

 

அனைத்து சிலைகளுக்கும் விபரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தால் எந்த வெளிநாடுகளுக்கும் சிலைகள் கடத்த முடியாது, அதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விடும். எனவே கோயில்களில் பாதுகாப்பு பணிக்கு உரிய பாதுகாவலர்கள் உடனே நியமிக்கப்பட வேண்டும். அதுவரை இரவு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்திட வேண்டும்."என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.