Skip to main content

 சமத்துவப் பொங்கல்: 9 இனத்தவர்கள் ஒன்றாக பொங்கல் வைத்து படையல்

Published on 16/01/2019 | Edited on 17/01/2019

  

p

 

 புள்ளாண்விடுதி கிராமத்தில் காலங்காலமாக 9 இன மக்கள் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து படையல் செய்து வழிபட்டு வருகின்றனர். 


    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு அனைத்து இடங்களிலும் மக்களிடம் உள்ள இன வேற்றுமைகளை மறக்கடிக்க சமத்துவ பொங்கல் வைக்க உத்தரவிட்டு சமத்துவப் பொங்கல் விழாக்களையும் நடத்தி வருகிறது. 

 

p


    ஆனால் அரசு அறிவிப்பிற்கு முன்பு பல நூறாண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள புள்ளாண்விடுதி கிராமத்தில் உள்ள அனைத்து இனத்தவர்களம் அதாவது 9 இனத்தவர்களும் இணைந்து ஒரே இடத்தில் பொங்கல் வைத்து ஒரே இலையில் படையல் வைத்து  வழிபட்டு வருகின்றனர். இது தான் இயற்கையாக தோன்றிய சமத்துவப் பொங்கல் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். 

 

p


    ஓவ்வொரு பகுதி மக்களும் புள்ளாண்விடுதி அரசு பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திடலுக்கு பொங்கல் பானை, விறகு உள்பட அனைத்தையும் கொண்டு வந்து கிராமத்தின் சார்பில் வைக்கப்படும் பொங்கல் பானையை வைத்தவுடன் அனைவரும் ஒரே நேரத்தில் பொங்கல் பானைக்கு தீ மூட்டுகின்றனர். தொடர்ந்து அனைத்து இனத்தவர்களும் படையலுக்கு முன்பு அர்ச்சனை செய்த பிறகு ஒவ்வொரு பானையில் இருந்தும் பொங்கல் எடுக்கப்பட்டு பெரிய இலையில் படையலிட்டு அனைவருக்குவம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் மேலதாளங்களுடன் ஊர்வலமாக கமலாயி அம்மன் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளையும் செய்து களைந்து செல்கின்றனர். 

 

p


  
    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது.. புள்ளாண்விடுதி கிராமத்தில் அனைத்இனத்தவர்களும் ஒற்றுமையாக வசிக்கிறோம்.  சுமார் ஆயிரத்தி 500 குடும்பங்கள் உள்ளனர். அதே ஒற்றுமை அனைத்திலும் இருக்க வேண்டும் என்பதற்காக எங்களின் முன்னோர்கள் ஒரே இடத்தில் பொங்கல் வைத்து மாடுகளை அவிழ்த்துவிடுவது வழக்கமாக கொண்டிருந்தனர். அதன் பிறகு வந்த தலைமுறையான நாங்களும் அதை பின்பற்றி வருகிறோம். இதனால் உண்மையான சமத்துவத்தை உணர்கிறோம். அதனால் தான் சமத்துவ விருதும் இந்த ஊராட்சிக்கு கிடைத்தது. இந்த சமத்துவ பொங்கல் முறை என்பது இனியும் தொடரும். பாகுபாடின்றி நடத்தப்படும் என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்; ரூ.36 லட்சம் அபராதம் வசூல்

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Surcharge on omni buses; A fine of Rs.36 lakh was collected
கோப்புப்படம்

பொங்கல் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து தமிழகம் முழுவதும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சிறப்புக் குழுக்கள் மூலம் தமிழக போக்குவரத்து சார்பில் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி 15 ஆயிரத்து 650 ஆம்னி பேருந்துகளில் சோதனை செய்யப்பட்டதில் ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலித்த ஆயிரத்து 892 ஆம்னி பேருந்துகளிடம் இருந்து ரூ.36.55 லட்சம் தமிழக போக்குவரத்து சார்பில் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை தமிழக போக்குவரத்துத்துறையின் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் விதிமுறைக்கு புறம்பாக தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்துகளை வரை முறைப்படுத்த மார்ச் 31 ஆம் தேதி வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசங்களில் பதிவு செய்து தமிழகத்தில் சுமார் ஆயிரம் பேருந்துகள் இயங்குகின்றன. இது போன்று பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் அந்தந்த மாநிலங்களில் தடையில்லா சான்று பெற்று மார்ச் 31 ஆம் தேதிக்குள் மறுபதிவு செய்து உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் பிற மாநிலத்தில் பதிவு செய்த ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்க அனுமதி இல்லை எனவும் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். 

Next Story

'காளையா காளையர்களா? நீயா நானா?'- நடிகர் சூரி பேட்டி

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
'Bulls or youngsters? Are you me?'-actor Soori interviewed

இன்று (17-01-24) அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.

தற்போது வரை எட்டு சுற்றுகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் 2 கார்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், பைக், தங்கம், வெள்ளி காசு், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், சைக்கிள், அண்டா, பீரோ, கட்டில் போன்ற பரிசுகளும் வழங்கப்படும். மேலும், பாதுகாப்பிற்காக தென்மண்டல ஐஜி தலைமையில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த நடிகர் சூரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''இன்று உலகத்திலேயே முக்கியமான நிகழ்வுகளில் இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் புகழ்பெற்றது. அதேபோல நமது உறவுகளால், நம் தமிழ், நம் பாரம்பரியத்தை, நம் கலாச்சாரத்தை காப்பாற்றும் ஒரே வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு.

காளையா காளையர்களா? நீயா நானா? அப்படி ஒரு வீர விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு. அதைத்தான் பார்க்க வந்தேன். போன வருடமும் வந்தேன். போன வருடமும் ஜல்லிக்கட்டில் என்னுடைய மாடு வந்தது. இந்த வருடமும் என்னுடைய மாடு வந்தது. தொடர்ந்து வந்து கொண்டே இருப்பேன். என்னுடைய மாடு இங்கே தொடர்ந்து அவிழ்த்து விடப்படும்'' என்றார்.