Skip to main content

சிறை கைதி மரணம் - புதுச்சேரியில் உறவினர்கள் போராட்டம்! 

Published on 28/11/2018 | Edited on 28/11/2018
m


புதுச்சேரியை அடுத்த ரெட்டிச்சாவடி,  கரிக்கன் நகரை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி. இவரை கடந்த 23-ம் தேதியன்று இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் பாகூர் போலீசார் கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

 

இந்நிலையில் ஜெயமூர்த்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிறைக்காவலர்கள் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயமூர்த்தி இன்று மாலை  உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த ஜெயமூர்த்தியின் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.


அப்போது போலீசார் அடித்து உதைத்ததால் தான் ஜெயமூர்த்தி உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பிரேத பரிசோதனைக்கு ஜெயமூர்த்தியின் உடலை எடுத்து செல்ல விடாமல் உறவினர்கள் தடுத்தனர். சம்பந்தப்பட்ட காவல்நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பிறகு பிரேத பரிசோதனைக்காக ஜெயமூர்த்தியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி துணை சபாநாயகராக  பாலன் போட்டியின்றி  தேர்வு!

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

 

புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து அவர் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். அதனால் துணை சபாநாயகராக இருந்த சிவகொழுந்து சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

p

 

அதையடுத்து  துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெறுவதாக சபாநாயகர் சிவக்கொழுந்து நேற்று முன்நாள் அறிவித்தார்.  

 

எதிர்க்கட்சிகள் சார்பில், யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், காங்கிரஸ் கட்சியின் உழவர்கரை சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.ஆர்.பாலன் போட்டியின்றி துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். 

Next Story

உலக சிட்டுக் குருவிகள் தினம்; சிட்டுக் குருவிகள் பராமரிப்பை இயக்கமாக்கும் புதுச்சேரி இயற்கை ஆர்வலர்! 

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

 

நமது உயிர்ச் சூழலில் உயிரியல் பல்லுயிர் தன்மையின் அதிமுக்கியத்துவத்தை உணர்த்த மார்ச் 20 அன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுதிறது. உலகம் முழுவதும் இன்று சிட்டுகுருவிகள் தினம் விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் புதுச்சேரி நகரச் சூழலில் சிட்டுக்குருவிகளைப் பாதுகாத்து சத்தமின்றி சாதித்திருக்கிறார் புதுச்சேரி, கொசப்பாளையத்தைச் சேர்ந்த அருண். 

 

புதுச்சேரியில் உள்ள ஒரு சிறிய தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணியாற்றும் இவர், தனது மாத வருவாயில் பெரும்பகுதியைச் சிட்டுக்குருவிகளின் கூண்டுகளுக்காக செலவிடுகிறார். கடந்த 8 ஆண்டுகளில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கும் இதுவரை ஏறத்தாழ 9000 இலவசக் கூண்டுகளை வழங்கியுள்ள இவர், அண்மையில் தனது சேவையை பாரிஸ், லண்டன் உள்ளிட்ட பன்னாட்டு நகரங்களுக்கும் நீட்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

pondy


நகரமயமாதல் மற்றும் நவீனமயமாக்கத்தால் இடம் பெயர்ந்த அல்லது அழிந்த, சுற்றுச்சூழல் சமன்பாட்டின் முக்கிய காரணியான பறவைகளுக்கு பாதுகாப்பான வாழ்விடங்களை ஏற்படுத்தி அவற்றின் உணவுத்தேவையை பூர்த்தி செய்வதோடு வாழும் சூழலை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பறவைக் கூண்டுகளை இவர் அன்பளிப்பாக அளித்துவருகிறார். 
 

மேலும், இவர் கடந்த மாதம் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நிறுவிய பலவண்ணப் பறவை ஊட்டிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது என்றால் அது மிகையல்ல.  இவற்றில் சிட்டுக்குருவி, அணில், புறா, பச்சைக்கிளி உள்ளிட்ட சிற்றினங்கள் உணவருந்தி பசியாறுகின்றன.

 

pondy



தொடக்கத்தில் பறவைகள் வளர்ப்பில் இருந்த இவரது ஆர்வம், மரணித்த ஒரு மாமரத்தால் வாழ்விடம் இழந்த சிறு பறவைகளின் துயரம் இவரது மன மாற்றத்திற்கு வித்திட்டதாக கூறுகிறார்.  இவர் சிட்டுக்குருவிக் கூண்டுகளைக் கொள்முதல் செய்யவும், நெல், தினை போன்ற தானியங்களைக் கொண்டு கூண்டுகளைப் பராமரிக்கவும் மாதம் தோறும் 6000 முதல் 7000 ரூபாய் வரை செலவிடுகிறார். தற்பொழுது பொதுச் சந்தையில் ஒரு கூண்டின் விலை ரூ.150 ஆக இருக்கின்ற போதிலும் புதுச்சேரி, ஆரோவில் பகுதியைச் சேர்ந்த ஜான்சன்  இவரது சேவையைக் கருத்தில் கொண்டு சகாய விலையில் இவருக்கு கூண்டுகளைத் தயாரித்து வழங்கி வருகிறார்.


 

pondy



இந்த ஆண்டு உலக சிட்டுக்குருவிகள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் நேற்று இவரது இல்லத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த விருப்பம் மற்றும் பராமரிக்கும் ஆர்வமுடைய பறவை ஆர்வலர்கள் மற்றும் நண்பர்களுக்கு 100 சிட்டுக்குருவி கூண்டுகளை பரிசளித்து மகிழ்ந்த இவர் சிட்டுகுருவிகளின் வாழ்வில் சத்தமில்லாமல் ஒரு மாற்றத்தை இவர் நிகழ்த்துகிறார் என்றால் அது மிகையல்ல. 
 

மேலும் இவரது சேவையை அங்கிகரித்து ஊக்கப்படுத்தும் வகையில் இவரது மூத்த சகோதரர் ராஜ்குமார் அவரது  மகனின் முதலாவது பிறந்த நாளான ஏப்ரல் 5 அன்று 70 சிட்டுக்குருவி கூண்டுகளைப் பரிசளிக்க முன்வந்துள்ளார்.  
 

சிட்டுக்குருவிகள் உள்ளிட்ட சிறு பறவைகளின் அழிவை சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே சூழலியல் ஆய்வாளர்கள் அவதானித்த போதிலும், அண்மைக் காலங்களில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைவதற்கு நகரமயமாதல் மட்டுமின்றி, நவீனமயமாக்கல் என்ற போர்வையில் மனிதர்களால் இயற்கைக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக சிட்டுக்குருவிகளின் வாழ்விடங்கள் பாதிப்பு மற்றும் உணவுப் பற்றாக்குறை போன்றவைகளை  பிரதான காரணிகளாக கூறும் இவர், பொதுவெளியில் வீசப்படும் இறைச்சி கழிவுகளை  ருசித்த காகங்கள் சிட்டுக்குருவிகளை வேட்டையாடுவதும் இந்த சிற்றினம் அழிவுப்பாதைக்கு செல்வதற்கு புறக்காரணமாக இருக்கக்கூடும் என்று நம்புகிறார். 
 

மேலும் வயல்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளை அழிப்பதால் அதைச் சார்ந்து வாழும் சிட்டுக்குருவிகளுக்கு போதிய உணவு கிடைக்காமல் அழிகின்றன எனவும்,  இதனால் உணவுச் சங்கிலி அறுபட்டு வாழ்சூழலில் உள்ள உயிரினங்களுக்கு இடையிலான உணவுத் தொடர்புகள் பாதிக்கப்படலாம் என்கிறார். 
 

கடந்த 8 ஆண்டுகளாக சிட்டுக்குருவிகளைக் காக்க கூண்டுகளை அளித்ததோடு, புதுச்சேரி முழுவதும் இவர் முன்னெடுத்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் விளைவாக புதுச்சேரியில் சிட்டுக்குருவிகளின் நடமாட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதை ஆதாரத்துடன் நிரூபிக்கும் இவர், கூண்டுகளை அளிப்பது மட்டுமல்லாமல், அதை பராமரிக்க தொடர் ஆலோசனைகளை வழங்குகிறார்.  பறவைகளின் வாழ்வு மற்றும் பாதுகாப்பு, இயற்கைப் சமன்பாட்டோடு ஒருங்கிணைந்த தொடர்புடையது என்பதை உணர்ந்து நம்மால் அழிக்கப்பட்ட பறவைகளின் வாழ்விடத்தை பறவைகளைக் கொண்டே மீட்டெடுக்கும் அருண் போன்றோரின் முயற்சிகளுக்கு துணை நிற்கவேண்டியது மானுட சமூகத்தின் கடமையாகும்.