Skip to main content

புதுச்சேரியில் சாலையின் நடுவே உள்ள பேரிகாடுகளை அகற்ற கோரியும் மறியல்!

Published on 11/06/2019 | Edited on 11/06/2019

 


புதுச்சேரி முதலியார்பேட்டை 100 அடி சாலையில் உள்ள மதுபான கடையை மூடக் கோரியும்,  ஜெயமூர்த்திராஜா நகர் சந்திப்பில் (சன்வே ஓட்டல் எதிரில்) சாலை நடுவில் தடுப்புகள் வைத்ததால்  ஜெயம் நகர்¸ அண்ணாலையார் நகர்¸ ஜெயமூர்த்திராஜா நகர்¸ இன்ஜினியர்ஸ் காலணி¸ திருப்பூர் குமரன் நகர், வேல்ராம்பட்டு ஆகிய பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அந்த தடுப்புகளை அகற்ற கோரியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். 

 

p


இதனை அறிந்த முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆ.பாஸ்கர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் முதலியார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமாரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு,  நேரில் வரவைத்து புகார் கூறினார். அதையடுத்து  பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய தடுப்புகள் அகற்றப்பட்டது.

 

p


 

சார்ந்த செய்திகள்