Skip to main content

பொள்ளாச்சி வன்கொடுமை: அதிமுக பிரமுகர் நீக்கம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு

Published on 11/03/2019 | Edited on 11/03/2019



பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு கைதான அதிமுக பிரமுகர் நாகராஜ் என்பவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 
 

''ஆளுங்கட்சி ஆதரவில் மாணவிகளை சீரழித்து வீடியோ எடுத்த பாலியல் கேங்!'' என்ற தலைப்பில் நக்கீரன் 2019 மார்ச் 09-12 இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த செய்தி வெளியானதும், தமிழ்நாடே அதிர்ச்சியடைந்து இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா? இதற்கு துணை போகிறதா? என்று கண்டன குரல் எழுந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நக்கீரனில் வெளிவந்த செய்தியை சுட்டிக்காட்டி,  ''தமிழ்நாடே குலைநடுங்கும் வகையில் பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் கொடுமையில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை காப்பாற்றிட ஆளுங்கட்சியே போராடுவது கடும் கண்டனத்திற்குரியது'' என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுக பிரமுகர் நாகராஜ் என்பவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 
 

ops-eps-nagaraj-admk

 

 

 


 


 

 

சார்ந்த செய்திகள்