Skip to main content

தர்மயுத்தத்தில் திமுக காணாமல் போய்விடும்- பொள்ளாச்சி ஜெயராமன்

Published on 20/02/2019 | Edited on 20/02/2019
pollachi jeyaraman


அதிமுக பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்ததை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். 
 

இந்நிலையில், “ஸ்டாலின் திணறி திண்ணையில் உட்காரும் வகையில் அதிமுக கூட்டணி உருவாகியுள்ளது. நாடாளுமன்றம் என்ற தர்மயுத்தத்தில் திமுக காணாமல் போய்விடும். தேர்தல் களம், தேர்தல் போர் தொடங்கிவிட்டது. கடந்த தேர்தலில் இழந்த 2 தொகுதிகளான தருமபுரி, குமரியை சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” என்று சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கோவையில் நடைபெற்ற அம்மாபேரவை மண்டல கூட்டத்தில் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''ஏங்க அதிமுக என்றால் நாங்கதாங்க''- டென்ஷன் ஆன ஜெயக்குமார் 

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

"If you long for AIADMK, we will bear it" - a tense Jayakumar

 

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க, தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான, ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (01/08/2022) காலை 11.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதன் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

அந்த வகையில், அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி தரப்பில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோவை செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கோவை செல்வராஜ் கலந்துகொண்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், ''அதிமுகவின் சார்பில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் நாங்கள் இரண்டு பேரும்தான் கலந்துகொண்டோம். எனவே வேறு யாரோ கலந்துகொண்டது பற்றி எங்களிடம் கேட்காதீர்கள். அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் எனத் தேர்தல் ஆணையத்திடம் கேளுங்கள் என டென்ஷன் ஆனார். அப்பொழுது, கோவை செல்வராஜ் அதிமுக இடத்தில் உக்கார்த்திருந்தாரே எனத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, 'ஏங்க அதிமுக என்றால் நாங்கதாங்க' என்றார்.

 

விடாத செய்தியாளர்கள் 'இன்றைக்குத் தேர்தல் ஆணையத்தில் வந்ததுபோல் நாளை சட்டமன்றத்தில் நாங்கள்தான் அதிமுக என்று அவர்கள் வந்து உட்கார்ந்தால்? எனக் கேள்வி எழுப்ப, ஏங்க யாராவது ஏதாவது சொல்லிட்டுப்போறாங்க அதெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க'' என்றார்.  

 

Next Story

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கும் அதிமுகவின் முக்கிய புள்ளியின் மகன்... ஆக்சன் எடுக்க தயாரான சிபிஐ!

Published on 21/12/2019 | Edited on 21/12/2019

பொள்ளாச்சி விவகாரத்தை விசாரித்துவரும் சி.பி.ஐ. சீக்ரெட்டா ஒரு அதிரடி ரிப்போர்ட்டைத் தயார் பண்ணி டெல்லிக்கு அனுப்பியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதில், பெண்களை ஏமாற்றி ஆபாசப்படம் எடுத்த விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டிருப்பது உண்மைதான் என்றும், இவர்கள் ஏழ்மையான, அழகான பெண்களை குறிவைத்து செயல்பட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, அந்த மாதிரியான அப்பாவிப் பெண்களைக் கவர மகளிர் சுய உதவிக் குழுவில் அவர்களுக்கு கடன் வாங்கித் தருவதாக அணுகுவார்கள். இந்தக் கிரிமினல் கும்பலில் சிலர் கந்துவட்டித் தொழிலையும் நடத்தி வந்தனர். 
 

issues



அதனால் பெண்களுக்குக் கந்து வட்டிக்குப் பணம் கொடுத்தும் அவர்களை வீழ்த்தினார்கள். இப்படி நூற்றுக்கணக்கான பெண்களை இவர்கள் தங்கள் வலையில் விழ வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் அந்த ரிப்போர்ட்டில் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். அதோடு, இவர்களால் ஏமாற்றப்பட்ட நான்கைந்து பெண்களின் கண்ணீர் ததும்பும் வாக்குமூலத்தையும் அவர்கள் இணைத்திருக்கிறார்கள் என்கின்றனர். ஆளுந்தரப்பு பிரபலங்கள் பலர் பெயர் அடிபடுவதாக கூறுகின்றனர். இந்த பகீர் அறிக்கையைப் பார்த்த டெல்லி மேலிடம், உள்ளாட்சித் தேர்தல்வரை மேற்கொண்டு எந்த நடவடிக்கையிலும் இறங்க வேண்டாம். நாங்கள் சொல்லும்போது நட வடிக்கை எடுத்தால் போதுமானது என்று சொல்லியிருக்கிறது.