Skip to main content

டிடிவியும் எடப்பாடியும் இணையப்போகிறார்கள்;மதுரை ஆதீனத்தின் ஏக்கமும்;டிடிவியின் மறுப்பும்

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

டிடிவி தினகரன் அணிக்கும் அ.தி.மு.க.வுக்கும் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் டிடிவி.தினகரன் மற்றும் அவர் அணியில் இருப்பவர்கள் அனைவரும் அதிமுகவில் இணைவார்கள்," ஜோதிடம் கணித்தவர் போலவே  பேட்டியளித்துள்ளார் மதுரை ஆதீனம்.

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே  உள்ள திருப்புறம்பியத்தில் மதுரை ஆதினத்திற்கு சொந்த சாட்சிநாதர் ஸ்வாமி ஆலயம் உள்ளது. அங்கு வந்திருந்த  292 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ.அருணகிரிநாத தேசிக பரமாச்சார்ய சுவாமிகளான மதுரை ஆதீனம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

 

TTV and edappadi joining together;Nostalgia of madurai adinam;ttv  Disclaimer

 

எப்போதுமே ஆன்மீகத்திற்கு அப்பால்,  இந்திய, தமிழக அரசியலை பேசிபரபரப்பை உண்டாக்குவது  மதுரை ஆதீனத்தின் வேலையாக இருக்கும்,  அந்த வகையில் தற்போது டிடிவி தினகரன் அணியும், எடப்பாடி பழனிச்சாமி அணியும் இணையும் என அதிரடி கிளப்பியுள்ளது ஆதினம். 

 

மதுரை ஆதீனம் கூறுகையில், " டிடிவி தினகரன் நல்ல திறமைசாலி அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி, அவரது வெற்றி இறைவன் கையில் தான் உள்ளது. மக்கள் அனைவரும் அதிமுக, பாஜக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிமுக தன்னை முறையாக அழைத்தால் பிரச்சாரம் செய்யவும் தான் தயார். சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பின் ஆட்சி மாற்றம் வராது, தொடர்ந்து அதிமுக தான் ஆட்சியில் நீடிக்கும், பொள்ளாச்சி சம்பவத்திற்கும் தேர்தலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. " என்று தனக்கே உரிய பாணியில் கூறினார்.

 

eps

 

"எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சிக்கு துதிபாடி புகழ்வதே மதுரை ஆதீனத்தின் வேலை.  மற்ற ஆதீனங்கள் அரசியலைப்பற்றி வெளிப்படையாகப் பேச மாட்டார்கள். ஆனால் மதுரை ஆதினமோ சற்று அதிலிருந்து வேறுபட்டு அரசியல் மற்றும் சமூகம், என சகலத்தையும் கலந்துப் பேசி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையான ஒன்றுதான்.  திமுக ஆட்சியின் போது கலைஞரை புகழ்ந்து தள்ளி ஜெயலலிதாவிடம் வாங்கிக்கட்டிக் கொண்ட கதைகளும் உண்டு. சபள சாமியார் நித்தியானந்தாவிடம், எதற்கோ சிக்கி சின்னாபின்னமாகிய கதைகளும் அவருக்கு உண்டு. 

 

தற்போது எடப்பாடி பழனிச்சாமியும், டிடிவி.தினகரனும் ஒன்று சேர்வார்கள் என்று புகழ்ந்து தள்ளியதோடு, பொள்ளாச்சி பாலியல் வண்கொடுமை விவகாரம், தேர்தலில் ஒன்றும் செய்யாது என பெண்ணியத்தை கொச்சைப்படுத்துவது போல் பேசியிருப்பதும், இதுவரை ஏந்த ஆதீனமும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக வாக்குகேட்டு வீதிக்கு வருகிறேன் என்று  இதுவரை யாரும் கூறியதில்லை.  ஆனால் மதுரை ஆதீனம் அதையும் செய்கிறேன் என்றுக்கூறுவது வேதனையளிக்கிறது. அவர் சார்ந்துள்ள ஆன்மீகப் பணியில் அவர் இதுவரை எந்த சாதனைகளையும் நிகழ்த்தியதில்லை, குறிப்பாக அவரது கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோயில் சிதிலமடைந்து பொதுமக்கள் வந்து செல்வதற்கும், வணங்குவதற்கும் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை. அந்த காலத்தில் முன்னோர்கள் தேர் ஓட்டினார்கள். ஆனால் இன்று அந்த தேர் நொறுங்கி புதராக மண்டிக் கிடக்கிறது. குளங்கள் புதர்மண்டிக்கிடக்கிறது.  இப்படி அவரது நிர்வாகத்தில் இருக்கும் குளறுபடிகளை செய்ய முடியாத அவர், ஆன்மிகப் பணியை விட்டு,  அரசியலில் வீதிக்கு,வீதி வந்து தேர்தலில் வாக்கு கேட்கிறேன். என்று கூறுவது வேதனையாக இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது என்கிறார்கள் திருப்புறம்பியம், கஞ்சனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் பக்தர்களும்.

 

ttv

 

மதுரை ஆதீனத்தின்  இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் டிடிவி தினகரன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அ.தி.மு.க.வில் இணைப்பதற்காக தினகரனுடன் சமரசப் பேச்சு நடந்துவருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல.. அதற்கு அவசியமும் இல்லை! என கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.