Skip to main content

 6 பேர் கொண்ட கும்பலால் கோவை அருகே பிரபல கொள்ளையன் வெட்டி கொலை 

Published on 28/10/2018 | Edited on 28/10/2018
bl


கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிநாயக்கன் பாளையத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீர்ர் தாஸ் சின் மகன் பிரவிண் தாஸ். இவன் மீது செயின் பறிப்பு, விபச்சார அழகிகளை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. 

 

கோவை மாவட்டம் மட்டுமின்ரி நீலகிரி மாவட்டத்திலும், பிரவிண் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. குண்டர் சட்டத்திலும் பிரவிண் கைது செய்யப்பட்டுள்ளான். இன்று காலை பிரவிண் சர்ச்சுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பி அருகிலுள்ள மகாலட்சுமி கோவில் அருகே வந்தபோது, 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென தாங்கள் வைத்திருந்த அருவாளால் பிரவிணை முதுகு மற்றும் தலையில் வெட்டி அங்குள்ள சாக்கடையில் தள்ளி விட்டு உடனடியாக தப்பி சென்றனர். சம்பவ இட்த்திலேயே பிரவிண் ரத்த வெள்ளத்தில் பலியானான். 

 

இது குறித்து தகவல் அறிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து பிரவிண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன் விரோதம் காரணமாக பிரவிண் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பாண்டியராஜன் சம்பவ இடத்திற்கு வந்து நேரடியாக விசாரணையில் ஈடுபட்டனர். தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கபட்டு உள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். போலீஸ் நாய் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் கொலையாளிகளை தேடும் பணி நடைபெற்றது. இந்த கொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரத்த பிளேட்லெட்க்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ்-தனியார் மருத்துவமனைக்கு சீல்

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

 Chathukudi Juice-Private Hospital Seal for Blood Platelet Replacement

 

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு ரத்த பிளேட்லெட்க்கு பதிலாக பழச்சாறு ஏற்றியதாக தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் உத்திர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

 

உத்திரபிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜில் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட  32 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அதனால் அவருக்கு உடனடியாக பிளேட்லெட் செலுத்த வேண்டும் எனவும் அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 Chathukudi Juice-Private Hospital Seal for Blood Platelet Replacement

 

அதனைத் தொடர்ந்து நோயாளிக்கு பிளேட்லெட் ஏற்றப்பட்டது. பின்னர் வேறு ஒரு மருத்துவமனைக்கு அந்த நபர் மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்தார்.  பிளேட்லெட்க்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை ஏற்றியதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் வீடியோ வெளியிட்ட நிலையில்,  துணை முதல்வரின் உத்தரவின் பேரில் அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு சீல் வைத்து விட்டு சென்றனர்.

 

 

Next Story

வெட்டியது யார் ? வெட்டுப்பட்டது யார் ?குழப்பத்தில் போலிஸார்

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

 

திருவண்ணாமலை நகரில் கிரிவலப்பாதையில் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் நுழைவாயிலில் நின்றிருந்த ஒருவரை ஒரு கும்பல் அருவா மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளது. 

 

ப்

 

இதனைப்பார்த்து அங்கிருந்த கடைக்காரர்களும், அந்த வழியாக சென்ற பொதுமக்களும் பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர். 

 

வெட்டி கொலை செய்யப்பட்டவரின் உடல், ரத்த வெள்ளத்தில் கிடந்ததை ஒரு கும்பல் காரில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இதுதொடர்பாக இதுவரை யாரும் புகார் செய்யவில்லை எனக்கூறப்படுகிறது. 

 

இந்த தகவல் தெரிந்த திருவண்ணாமலை நகர காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. வெட்டப்பட்டது யார், வெட்டியது எந்த கும்பல், எதற்காக வெட்டியது என சம்பவயிடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இந்த விவகாரம் திருவண்ணாமலை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.