Skip to main content

உடனடி சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம்: உயிரிழந்த போலிஸ்காரரின் நண்பர்கள் புலம்பல்

Published on 02/05/2018 | Edited on 02/05/2018
Police


 

விபத்தில் படுகாயமடைந்த போலிஸ்காரருக்கு உடனடி சிகிச்சை அளித்திருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என உயிரிழந்த போலிஸ்காரரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். 
 

    புதுக்கோட்டை மாவட்ட தெம்மாவூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 29). புதுக்கோட்டை ஆயுதப்படையில் போலிஸ்காரராக உள்ளார். கடந்த மாதம் 26ந் தேதி தனது உறவினரான கனிமொழியை (24) புதுக்கோட்டை ஆயுதப்படையில் பணியில் சேருவதற்க்காக நாகை மாவட்டம் வாய்மேடு கிராமத்தில் இருந்து ஒரு காரில் அழைத்து வந்தபோது வடகாடு அரசு ஆரம்பசுகாதார நிலையம் செல்லும் பிரிவு சாலை அருகே எதிர்பாரதவிதமாக கார் புளியமரத்தில் மோதிய விபத்தில் பார்த்திபன், கனிமொழி, கனிமொழியின் தம்பி அஜீத்குமார் (17), கார் ஓட்டுநர் நாகரெத்தினம் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.
 

    படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு தொடர்ந்து சிகிச்சைக்கு தாமதம் ஏற்பட்டதால் சக நண்பர்கள் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் நினைவின்றி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பார்த்திபனை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 
 

    திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த பார்த்திபனுக்கு சிகிச்சைக்காண செலவு தொகையை செலுத்த அவரது குடும்பம் சிரமப்பட்டதால் சக போலிஸ் நண்பர்கள் பலர் இணைந்து சிகிச்சைக்காக பணம் செலுத்தினார்கள். ஆனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி போலிஸ்காரர் பார்த்திபன் பரிதாபமாக இறந்தார்.
 

    சம்பவம் குறித்து அவரது போலிஸ் நண்பர்கள் கூறும் போது.. விபத்து ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் புதுக்கோட்டை அரசு மருத்தவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். முதலில் முதலுதவி சிகிச்சைம ட்டும் அளிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மேல் சிகிச்சை அளிக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஏற்பட்டதால் மூச்சு தினறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பார்த்திபனை சக போலிஸ் நண்பர்கள் வார்டு டாக்டர் இல்லாமல் இருப்பதை அறிந்து தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் 7 நாட்கள் வரை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பார்த்திபன் உயிரை காப்பாற்ற முடியவில்லை. ஆனால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுவி சிகிச்சையுடன் காலம் கடத்தாமல் மேல்சிகிச்சையும் அளித்திருந்தால் பார்த்திபன் பிழைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமோ என்று நினைக்கிறோம் என்றனர் வருத்தமாக. மேலும் கடந்த மாதம் ஒரு ஜல்லிக்கட்டில் ஒரு போலிசாருக்கு கழுத்தில் மாடு முட்டி படுகாயத்துடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று 4 மணி நேரம் காத்திருந்து அதன் பிறகு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக் கொண்டு சென்றோம் என்றனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

மத்திய அமைச்சரின் கார் கதவை திறந்ததால் விபத்து; பா.ஜ.க தொண்டருக்கு நேர்ந்த சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
 Tragedy of BJP worker on Union minister's car door opened in accident

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது.  ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

பெங்களூர் வடக்கு உள்பட 14 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஷோபா, தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தின் போது, கார் கதவை ஓட்டுநர் திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் ஷோபா, நேற்று (08-04-24) காலை வழக்கம்போல், தனது காரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரது கார், கே.ஆர்.புரம்  பகுதியில் உள்ள கோவில் அருகே சென்று போது, ஷோபாவின் கார் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, தன்பக்கம் இருந்த கார் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது, மத்திய அமைச்சரின் காருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மத்திய அமைச்சர் காரின் கதவி மீது மோதினார். இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த அவர் சாலையிம் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, கீழே விழுந்த அவர் மீது ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்து அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஆர்.புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விபத்தில் பலியானவர், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (55), என்பதும், பா.ஜ.க கட்சியின் தீவிர தொண்டரான பிரகாஷ், தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. மத்திய அமைச்சர் ஷோபாவின் கார் கதவை திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.